Posts

Showing posts from 2004

லேட்டஸ்ட் நிலவரம் - ரஜினி ராம்கியிடமிருந்து....

நாகை மாவட்டம் தான் மிக அதிகமான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றது. உயிர்சேதங்களும் மிக அதிகம். கரையோரமாக ஒதுங்கி இருக்கும் உடல்கள் மணலில் புதைந்து கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் வேலையில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. நம் வலைப்பதிவு நண்பர்கள் நன்கொடை அளித்த பொருட்கள் பத்திரமாக வந்து சேர்ந்தன. அவற்றில் பெருமளவு நாகையைச் சென்றடைந்து விட்டது. நாளை ராம்கி நாகைக்குச் செல்கின்றார். தற்போது முகாம்களில் தங்கி இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான முக்கியத் தேவைகள், உணவு, உடை, மருந்துகள். நம் வலைப்பதிவு நண்பர்கள் மூலமாகவும், இன்னும் பல இடங்களில் இருந்தும் இவை வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. தற்போதைக்கு, பொருட்கள் சேகரிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ( பணம் தவிர்த்த இவ்வுதவிகளை, தங்கள் பகுதியில் இருந்து செயல்படும் தன்னார்வலர்களிடம் கொடுத்தால், அவை, பாதிக்கப்பட்ட வேறு மாவட்டங்களுக்கு அளிக்க ஏதுவாக இருக்கும் ). பொருட்கள் குவிந்தும், அவற்றை விநியோகம் செய்யத் தேவையாக ஆள் பலம் அங்கு இல்லை. மேலும் களப்பணிகளைச் செய்யவும் ஆட்கள் குறைவாக இருக்கின்றார்கள். உடல் உழைப்பை நல்க விரும்பும் தன்னார

Obituary - P.V.Narasimha Rao

Image
பி.வி.நரசிம்மராவ் (1921 - 2004) இந்திய அரசியலிலும், காங்கிரஸின் கோஷ்டி அரசியலிலும் ராவ் அவர்களின் இடம் என்ன என்பது விவாதத்துக்கு உரியது என்றாலும், இந்தியப் பொருளாதார முன்னேற்றத்தில் அவருக்கு ஒரு தனியான இடம் இருக்கிறது என்பதை, மாற்று சித்தாந்தங்கள் கொண்டவர்களும் ஒப்புக் கொள்ளுவார்கள். 1991 க்குப் பிறகு தொழில் துவங்கியவர்கள் எல்லாம் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள் என நான் நினைப்பதுண்டு. தற்காலத் தொழில் அதிபர்கள், நிர்வாகம், விற்பனை, உற்பத்தி, பங்குதாரர்கள் மீதான கரிசனை என்று தங்கள் தொழிலை நேரடியாகப் பாதிக்கக் கூடிய விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். தாராளமயமாக்கலுக்கு, முந்தைய கட்டுப் படுத்தப் பட்ட பொருளாதார சூழ்நிலையில் இது சாத்தியமில்லை. தொழிலுக்கு முட்டுக்கட்டையான லைசன்ஸ் ராஜை ஒழித்துக் கட்டியதில் ராவுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. வெளிநாட்டு முதலீடுகளுக்கான தடைகளை நீக்கியதில், அதை விட முக்கியமான பங்கு உண்டு. யார் எங்கு, எப்போது புதிய தொழில் துவங்கலாம், புதிய ஆலைகள் நிறுவலாம் என்று அரசாங்கம் தான் தீர்மானித்தது. ரேயான் தயாரிப்பதில் முன்னணியில் இருந்த பிர்லா நிறுவனம் ( த

முகுந்த் நாகராஜனின் நான்கு கவிதைகள்

நூ ல் வடிவத்தில் படித்த மிகச் சில கவிதைத் தொகுப்புகளில் ஒன்று சமீபத்தில் வாசித்த 'அகி'. அதில் இருந்து நான்கு கவிதைகள் ஆட்டம் போடும் வீடு பூட்டிக் கொண்டு கிளம்பினேன் எதையோ மறந்து போனதால் உடனே திரும்பினேன்; திறந்தேன் டிவியும் ·ப்ரிட்ஜும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தன அலமாரியில் உள்ள புத்தகங்களெல்லாம் அணி அணியாகப் பிரிந்து கபடி ஆடிக் கொண்டிருந்தன. சோ·பா-வுக்கும் சேரு-க்கும் ஓட்டப் பந்தயம். பழைய சாக்ஸ்கூட தன்னிச்சையா சுற்றிக் கொண்டிந்தது ஒரு நிமிஷத்துக்குள் எல்லாம் இயல்பு நிலையை அடைந்து விட்டன 'என்ன இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டான்' என்று தண்ணீர் பாட்டில் முணுமுணுத்தது. அப்புறம் அமைதியாகிவிட்டது பிறகு ஒன்றும் நிகழவில்லை. பூட்டிக்கொண்டு கிளம்பினேன். திறப்பதற்கு முன் தட்டி இருக்க வேண்டும் என்ன நாகரிகம் இல்லாத பிறவி நான்! மரணத்தைக் கையாளுதல் செத்துப் போனவர்களுக்குச் செய்ய வேண்டியவைகளின் பட்டியல் என்னிடம் இல்லை கையாண்டதில்லை மரணத்தை தனியாய் இதுவரையில் எரிக்கவோ புதைக்கவோ வேண்டும். அதற்கு முன் மரணச் சான்றிதழ் வாங்கி வரவேண்டும்.

ஒரு புது அனுபவம்

இ ந்த மாத திசைகளுக்காக பேட்டி ஒன்று எடுக்க வேண்டும் என்று பா.ராகவன் சொன்ன போது, 'அதுக்கென்ன செய்தால் போச்சு' என்று சொல்லி விவரங்கள் கேட்டுக் கொண்டு, தொலைபேசியை கீழே வைத்த பின்புதான், சொரேர் ( இதை உபயோகிப்பதற்கு மன்னிக்கவும் ) என்றது. இதுக்கு முன்பு நான் பேட்டி எல்லாம் எடுத்ததில்லையே? எப்படிப் போகவேண்டும். எப்படி நேரம் வாங்க வேண்டும் , என்ன என்ன கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டும். சொல்வதை ஒலிப்பதிவு செய்து கொள்ளவேண்டுமா அல்லது எழுதிக் கொள்ள வேண்டுமா, சுருக்கெழுத்து தெரியவேண்டுமா? போகிற வீட்டில் நாய் இருக்குமா , கட்டிப் போட்டு இருப்பார்களா என்று ஏகப் பட்ட சந்தேகம் வந்து, மீண்டும் தொலைபேசி செய்து, விளக்கம் கேட்டுக் கொண்டேன். குறித்த நேரத்துக்குப் போனேன். நான் பேட்டி எடுத்த எழுத்தாளர் ஆர்விக்கு வயது எண்பதுக்கும் மேலே. பொறுமையாக, நிதானமாக சென்ற பேட்டியில் நிகழ்ந்த சமாசாரங்கள் எல்லாம் சுவாரசியமற்றவை. பேட்டி முழுதும் கேள்விகள், பதில்கள், கேள்விகள், பதில்கள் என்ற ரீதியில் சென்றது. என்னால் மட்டும் தான், உடைக்க (de-cipher) முடியும் என்கிற மாதிரியான குறிப்புக்களை வைத்துக் கொண்டு, ம

arbor mentis - The cucumber seller of Chennai

சமீபமாக, இந்தியாவைப் பற்றியும் , குறிப்பாக தமிழ் நாடு பற்றியும் ஆஹா ஓஹோ என்று புகழும் கட்டுரைகள் சிலவற்றை பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது. அந்த வரிசையில் இங்கே ஒரு கட்டுரை. இந்த வார பிசினஸ் வேர்ல்ட் பத்திரிக்கையில் வந்த column. அது. அந்தக் கட்டுரை படிங்க, படிச்சுப் பாத்துட்டு ஏதாச்சும் சொல்லணும்னு தோணினா சொல்லுங்க

கலைஞர் கருணாநிதி

1996 இல் வந்த கல்கியின் வந்த சிறுகதைகளின் unofficial பதிப்பு [ அதாவது, கல்கி பக்கங்களை கிழித்து, தைத்து, உருவாக்கப் பட்ட நூல்வடிவம்). தமயந்தி, பெ.நாயகி, ஜி.சுரேந்திரநாத், பா.ராகவன், வெங்கடேஷ், ரிஷபன், கிருஷ்ணா, பத்மா ரவிசங்கர், யோகி, ஆகியோர் எழுதின கதைகள்.[ இதைப் பற்றி தனியாக பதிவு செய்ய வேண்டும் ] இப்போது வருகின்ற கதைகளுக்கு கிட்டேயே வரமுடியாது என்பதைப் போன்ற நல்ல கதைகள். திடுமென்று கலைஞரின் பேட்டி குறுக்கே வந்தது. கலைஞரின் எழுபத்துஐந்தாவது பிறந்த நாளின் போது எடுத்த பேட்டி அது. இதிலே ஒரு விசேஷம் என்ன என்றால், அரசியல் தொடர்பான கேள்விகள் கிடையாது. பொதுவான விஷயங்கள், சினிமா அனுபவங்கள், நட்பு வட்டம் , குடும்பம் ஆகியவற்றைப் பற்றிய கேள்விகள். கேள்விகளை எழுதி, அனுப்பி வைத்து, பதிலையும் எழுதி வாங்கிக் கொள்கிற வழக்கமான பாணி அல்ல கலைஞருடையது என்று பத்திரிக்கை நண்பர்களிடம் இருந்து கேள்விப் பட்டிருக்கிறேன். அதனாலேயே, சில சமயம் வெகு சுவாரசியமாக இருக்கும். அரசியல் தொடர்பான விஷயங்களில், கலைஞர் மீது பெரிதாக ஈடுபாடு ஏதும் இல்லை என்றாலும், சில சமயம் புத்திசாலித்தனமான நகைச்சுவையுடன், பளிச் என்று

Hutch : The Boy and the Pug

ந ம் poor man's Shunu Sen பக்கம் கொஞ்சம் தலை காட்டலாம் என்று எண்ணம். பிரபலங்களை மையமாக வைத்து விளம்பரங்கள் செய்வது ( celebrity endorsement) பற்றிய பல்வேறு கருத்துக்களை, சமீபமாக நாளிதழ்களில் படித்து வருகிறேன். பிரபலங்களின் , பிராபல்யத் தன்மை குறைவதும், அதிகமாவதும், அவர்கள் விளம்பரம் செய்யும் பிராண்ட் களை பாதிக்கும் என்பது ஒரு சாரார் சொல்வது. அது அப்படி அல்ல, என்று சில விளம்பர உலகின் தாதாக்கள், புள்ளிவிவரக் கணக்கை வைத்துக் கொண்டு, படம் காட்டி நிருபிக்கிறார்கள். அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த மாதிரி பிரபலங்கள் இல்லாமலேயே சக்கை போடு போட்ட ஹட்ச் நிறுவனத்தின் விளம்பரம் பற்றி சில வார்த்தைகள். இந்த விளம்பரத்தை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். படு அழகான ஒரு குட்டிப் பையனும், அதை விட அழகான ஒரு நாயும் தோன்றும் ஒரு விளம்பரத் தொடர். இந்த விளம்பரத்தின் பயனாக, ஹட்ச் செல்பேசி சேவைகளின் விற்பனை கூடியிருக்கிறது, brand awareness உம் கூடியிருக்கிறது என்று செய்திகள் சொல்கின்றன. இந்த விளம்பரத்தின் மாஸ்டர் மைண்ட், O & M நிறுவனத்தின் "national creative director [ இதைத் தமிழ் படுத்த

Serial Killers

த மிழ் சமுதாயத்தில், என்ன என்ன உறவு முறைகள் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளத் தொலைக்காட்சித் தொடர்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டாலே போதும். அம்மா, அப்பா, அக்கா, தம்பி, சித்தப்பா, சித்தி என்று அத்தனை உறவுமுறைகளின் பெயர்களையும் வைத்து தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்கள் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. ஆனால், அவை, பெரும்பாலானவர்களின் உபயோகமான நேரத்தை ( quality time ) விழுங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. மாலை ஆறரை மணியில் இருந்து இரவு பதினொன்றரை மணி வரையிலான நேரத்தை தொலைக்காட்சிகளின் அனைத்து அலைவரிசைகளும் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் வருவதற்கு முன்பாக நாம் அந்த குறிப்பிட்ட நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று சிந்தித்துப் பார்க்கின்றேன். உறவினர்/நண்பர்கள் வீட்டுக்குச் செல்வது, அல்லது உறவினர்கள்/ நண்பர்கள் நம் இல்லத்துக்கு வந்தால் அவர்களுடன் நேரம் செலவழிப்பது, குழந்தைகளின் வீட்டுப் பாடங்களுடன் மல்லுக்கட்டுவது, புத்தகங்கள் படிப்பது, காலையில் விட்டுப் போன ஆங்கில நாளிதழின் குறுக்கெழுத்த

Shame!!!!

Image
இந்தப் பெண்ணின் பெயர் இவாஞ்சலின் பிரின்ஸஸ். பெயருக்கு ஏற்றாற் போல இருக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இந்த குட்டி இளவரசி, ஆசிரியர் திட்டினார் என்பதற்காக, மேலே மண்ணெணை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். தற்போது அப்போலோ மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்தியம் அளிக்கப் பட்டு வருகிறது. ஹிந்து செய்தி * இந்தப் பத்து வயதுப் பெண்ணுக்கு, அவமானம் என்ற சொல் எப்படி பரிச்சயமாகி இருக்க முடியும்? ஆசிரியர் திட்டுவது என்பது மிகவும் அவமானகரமான செயல் என்பதை இவளுக்கு யார் சொல்லித் தந்திருப்பார்கள்? * ஆசிரியரிடம் தண்டனை கிடைத்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற ஐடியாவை இவளுக்குள் விதைத்தவர்கள் யாராக இருப்பார்கள்? * மேலே மண்ணெண்ணை ஊற்றி, நெருப்பு வைத்துக் கொண்டால், அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து போய்விடும் என்று இவளுக்குத் தோன்றியது எங்கனம்? குழந்தைகளை குட்டிச்சுவராக்கும் சமூகத்தில் நானும் ஒரு அங்கம் என்பதை நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது....

G-19 ரோகிணி தியேட்டர்

Image
G-19 ரோகிணி தியேட்டர் பிபி வாயால் பிரம்மரிஷி பெற்ற படமாச்சுதேன்னு கொஞ்சம் கேஷ¤வலாத்தான் ரெயின்போ காலனி படத்தைப் பார்க்கப் போனேன். சும்மா சொல்லக் கூடாது, இயக்குனர் செல்வராகவன் அடி பின்னியிருக்கார். ரீடி·ப் தளத்துலே சமீபத்துலே செல்வராகவன் நேர்காணல் ஒன்றை படிச்சப்போ , ஒரு சுமாரான, அதி தீவிர புத்திசாலியல்லாத, சும்மா ஊர்சுற்றிவருவதைத் தவிர வேற எதுவுமே தெரியாத, ஒரு நகரத்து நடுத்தர குடும்பத்துப் பையனோட கதை தான் இந்த ரெயின்போ காலனின்னு சொல்லி இருந்தார். உண்மை. பன்னிரண்டு பேப்பர் அர்ரியர்ஸ் வெச்சிருக்கிற ஒரு பிகாம் இறுதியாண்டு மாணவனுக்கும், பிரசிடென்ஸி காலேஜில் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சைன்ஸ் இறுதியாண்டு படிக்கிற ஒரு சேட்டு பொண்ணுக்கும் இடையில் நடக்கிற சம்பவங்களும், நிலவுகின்ற உறவு முறைகளும், அதன் முடிவும் தான் மொத்த கதை. முதலிலே வெறுப்பு.. பிறகு பச்சாதாபம், பின் நட்பு, அதுக்குப் பிறகு காதல், காமம்ன்னு.... இன்ச் இன்ச்சா படம் விரியுது. பல கட்டங்களிலே நுணுக்கமான காட்சிகள். சோனியா அகர்வாலின் அருமையான முகபாவங்கள்... ஏ-க்ளாஸ். இன்னிக்கு தேதிக்கு டைட் க்ளோசப் வைக்கிற தைரியத்துக்காகவே ப

ET Awards - Entrepreneur of The Year

Image
இந்த வருட "Economic Times - Entrepreneur of The Year" விருது, கெவின்கேர் சி.கே.ரங்கநாதனுக்குக் கிடைத்திருக்கிறது . 1983 இல், வெறும் பதினைந்தாயிரம் ரூபாய் முதலீட்டில் துவங்கிய, ஒரு சின்ன நிறுவனம் , இன்றைக்கு 350 கோடி ரூபாய் நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது. இன்றைக்கு மிகப் பெரிய ரீடெயில் முதலைகள், rural marketing பக்கம் திரும்பலாமா என்று யோசித்துக் கொண்டிருக்க, ரங்கநாதன், அதை 15 வருடங்களுக்கு முன்பே செய்து சந்தையைப் பிடித்தவர். இவரை price player என்று வர்ணிப்பார்கள் அல்லது குற்றம் சாட்டுவார்கள். மார்க்கெட்டில் ஷாம்பூக்கள் பாட்டிலில் அடைத்து 40 ரூபாய் அளவில் விற்ற போது, அதிரடியாக, ஒரு சாஷேயில் பாக் செய்து, 50 காசுக்கு விற்று, ஷாம்பூ போன்ற நகர மக்கள் உபயோகப் படுத்தும் பொருளை குட்டி நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் எடுத்துச் சென்றவர். [ தற்போதைய விலை ஒரு ரூபாய்.]வெல்வெட் ஷாம்பூ, சிக் ஷாம்பூ என்று சாஷேயில் ஒரு குட்டி புரட்சியை நிகழ்த்தியவர். நான்கு காலி கவர்களைக் கொடுத்து விட்டு, ஒரு ஷாம்பூ பாக்கெட்டை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்ற டெக்னிக்கையும் அறிமுகப் படுத்தியவர் இவர்தான்

மத்தளராயர் , வெங்கட் சாமிநாதன் & காசி

காசி இ ந்த வார திண்ணை இதழில் காசி அவர்கள் எழுதியிருந்த கடிதம் ஒன்றைப் படித்தேன். முந்தைய வாரம் வந்த யூனிகோட் விவகாரம் தொடர்பான ஒரு நேர்காணலுக்கான மறுமொழி அது. திண்ணையில் எழுதியவர், தன் கருத்துக்களின் கூடவே, காசியின் பிரபலமான "என் கோடு உன் கோடு தனி கோடு யூனிகோடு" என்ற கட்டுரையில் இருந்து அப்படியே 'சுட்டுப்' போட்டிருக்கிறார். நானும் பார்த்தேன். சொற்கள், எண்கள் கூட மாற்றமில்லாமல் அப்படியே அப்பட்டமான காப்பி. கூகிள் வந்த பின்னால், தகவல்கள் பெறுவது ரொம்ப எளிமையாகிவிட்டது. நமக்கு வேண்டும் என்ற தகவல்களை மேற்கோள் காட்ட, கூகிளில் தேடி எடுத்துப் பயன் படுத்திக் கொள்கிறோம். ஆனால், அப்படி எழுதும் போது, மூலத்தையும் குறிப்பிடுவது தான் முறை. திண்ணையை வாசித்தவர்கள் அனைவருக்கும் இந்த விவகாரம் தெரிந்திருக்கலாம். இந்த விவகாரத்தில் , மிகச் சிறப்பானதாக நான் கருதுவது, காசியின் அணுகுமுறையைத் தான். இணையத்தில் வலைப்பதிவுகள் வந்த பின்னால், யாருடைய தயவும் இல்லாமல், நம்முடைய கருத்துக்களை நாமே பதிவு செய்து, அதை பிறர் படித்து, கருத்துகள் சொல்லவும் வழி வகை இருக்கிறது. இது போன்ற விஷயத்தை, வலைப்

பொழுது போகலைன்னா..... இப்படித்தான் ஏதாச்சும்....

சி ல வருஷங்களுக்கு முன்னே ( 17/18 வருஷம் இருக்கலாம் ) , ஒரு பயணம் போன போது, அந்த பி.ட்டி ஓட்டுனர் வச்சிருந்த ஒலிநாடாவிலே இந்தப் பாட்டைக் கேட்டிருக்கிறேன். அந்தப் பாட்டு, தென்னாற்காடு வள்ளலார் மாவட்டங்களிலே ரொம்ப பிரபலமான பாட்டுன்னு அந்த ஓட்டுநர் சொன்னது நினைவிருக்கு. முதல் தடவை கேட்கிறப்போ, ஒரு மாதிரியா இருந்தாலும், கேட்க கேட்க மனசு அந்தப் பாட்டிலே ரொம்பவும் லயிச்சு போச்சு. பயணம் முடிகிற வரை, திரும்பத் திரும்ப அந்தப் பாட்டைப் போட்டுக் கேட்டுக்கிட்டே இருந்தோம். ஒரு நல்ல வாட்ட சாட்டமா இருக்கிற ஆனால் தன் அழகு பத்தின அக்கறை இல்லாம இருக்கிற , வெள்ளந்தியான கிராமத்துப் பெண், தன்னை யார் யாரெல்லாம் சுத்தி வராங்கன்னும்,. தன் கிட்ட என்ன இருக்குதுன்னு எல்லாரும் இப்படி மேல வந்து விழறாங்கன்னும் புரியலயேன்னு அப்பாவித்தனமா பாடற ஒரு அட்டகாசமான கிராமத்து கானாப் பாட்டு. பாடல் வரிகள் சிலது வெவகாரமா இருக்கும் கொஞ்சம் விரசமாவெல்லாம் கூட இருக்கும்... இல்லே இல்லே... நம்ம நவீன பெண்கவிஞர்கள் டைப்ல இல்லே... இது கி.ரா டைப். நான் முதல்ல கேட்ட சமயத்திலே நான் பள்ளி மாணவன்கிறதால, காசட்டு வாங்கற அளவுக்கு எல்லா

காணாமல் போனவர்களில் எட்டு பேர் கொண்ட ஒரு பட்டியல்

மணிரத்னம் : ஒரு காலத்திலே ஜீவனுள்ள படங்கள் எடுத்தவர். கலைப்படங்களில் தென்படுகின்ற யதார்த்தத்தையும், வணிகரீதியான படங்களில் இருக்கும் சுவாரசியத் தன்மையையும் இணைத்து அற்புதமான பல படங்கள் தந்தவர். புத்திசாலிகளுக்கான படம் எடுக்க முனைந்து உணர்வு ரீதியான விஷயங்களில் கோட்டை விட்டவர். ஐம்பது வயதுக்கு மேலாகியும், இன்றைய இளைஞர்களின் சொல்லாடல்களையும் சங்கேதங்களையும், மானரிசங்களையும் அச்சாக அப்படியே திரைக்குக் கொண்டு வந்த அர்ஜுன் - மீரா கதாபாத்திரங்கள் ( ஆய்த எழுத்து ), இவரின் கவனிப்புத் திறனுக்கு ஒரு ஹால்மார்க். ஆயினும், முன்னொரு காலத்தில் செல்வா - சாருமதி ( நாயகன் ஜனகராஜ், கார்த்திகா) என்ற கதாபாத்திரங்களுக்கு இடையில் இருக்கிற அன்னியோன்னியத்தைக் கூட வெகு இயல்பாக சொல்ல முடிந்த இவருக்கு, இவரது சமீபத்திய ஸ்கீரின் கணவன் - மனைவி ( மாதவன் - மீரா ஜாஸ்மின்) பாத்திரங்களை ஒழுங்காக சித்திரிக்க முடியாமல் போய்விட்டது. எங்காவது கான்ஸ் படவிழா , ஐரோப்பிய ·பிலிம் பெஸ்டிவல் பக்கம் தென்படலாம். கட்டம் போட்ட காட்டன் சட்டை, ஜீன்ஸ் பக்கம் அணிந்திருப்பார். யூகி சேது : அங்குஷ் என்ற படத்தை தமிழில் பெயர்த்த போது, ( கவ

Lasting Legacies

[ இந்த போஸ்ட்ல சொல்ல வர மேட்டர் கடைசிப் பத்தியில் இருக்கிறது. அவசரமாக இருந்தா ஸ்கரால் செய்து கொள்ளுங்கள்] ஹௌரா மெயிலிலில் இருந்து ஒரு டாக்ஸி பிடித்து, அந்த மெகா cantilever ஐக் கடந்தால், முதலில் சென்று முட்டுவது எஸ்பளேனேட். எதுத்தாப்பல பெங்காலீ பிரபல நடிகர் உத்தம் குமார் வேலை செஞ்ச தியேட்டர் இருக்கும். (பேரு மறந்து போச்சு) அது அங்க இன்னும் இருக்குதான்னு பாத்து வெச்சிகிடுங்க. அதுதான் சௌரங்கி ரோட் என்றும் அப்பவும், ஜவஹர்லால் சாலைன்னு இப்பவும் அழைக்கப் படுகிற பிரபலமான சாலை. தியேட்டருக்குள் நுழையாமல், ரோட்டில் கடைபரப்பி சல்லிசாக விற்கப்படும் டெபொனேர், ·பாண்டஸி பழைய இதழ்களையெல்லாம் கண்டுக்காமல், அப்படியே போய்கினே இருந்தா இடது கைப் பக்கம் ம்யூசியம் வரும் அதை உடுங்க. [ குழப்பமாக இருந்தால், எதிர்ப்படுகின்ற யாராவது பெண்ணிடம் சென்று ' ஹமி துமாக்கே பாலோ பாஷே? " என்று விசாரித்தால் நீங்க போகவேண்டிய இடத்துக்கு 'கரக்டாக' கூட்டிக் கொண்டு போய் விடுவார் :-) ] அப்புறம் அமெரிக்க தூதரகம் வரும், அதையும் தாண்டுங்க. கொஞ்ச தூரம் போனப் பின்னாலே, ஐடிசி பில்டிங் வரும். அங்கிருந்து நாலைஞ

புரியாத பத்து விஷயங்கள்

1.எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த ஸ்னேஹா வை எனக்கு மட்டும் அடையாளம் தெரியாமல் போவது ஏன் ? 2. எனக்கு நேரம் கிடைக்கும் வார இறுதிகளில் எல்லாரும் கம்ம்னு இருக்க, நான் வேலையா சுற்றிக் கொண்டிருக்கும் நேரங்களில் , இணையம் பரபரப்பாக இருப்பது ஏன்? 3. எல்லாரும் சடுதியில் முடித்து விட்டுப் போக, எனக்கு முன்னால் நிற்கிறவன் மட்டும் தொடர்ந்து ஐந்து நிமிடம் 'உச்சா' போவது ஏன்? 4. நாளை மற்றுமொறு நாளே என்ற குட்டி புஸ்தகத்தை நாற்பது நாளாகப் படித்தும் இன்னும் முடிக்க முடியாமல் இருப்பது ஏன்? 5. இணையத்தில் எங்கே முகமூடி தென்பட்டாலும், உடனடியாக ' நீங்க தானே அது? " என்று எனக்கு ஒரு மடல் வருவது ஏன்? 6.பிடித்த நடிகர் கவுண்டமணி செந்தில் என்று சொன்னால், எல்லாரும் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பது ஏன்? 7. என் கூட ஆரம்பித்தவர்கள் எல்லாம் 'புகைவண்டி' ஓட்டுவதை நிறுத்தி விட, நான் மட்டும் இன்னும் விடாமல் ஓட்டுவது ஏன்? 8. கமலஹாசன் இன்னும் டூயட்டு பாடுவதை நிறுத்தாதது ஏன்? 9 "நீங்கள் கேட்ட பாடலில்" எந்த குழந்தையைக் கேட்டாலும், பிடித்த நடிகர் விஜய் என்று சொல்வது ஏன்?

புரியுதா இல்லையா

[ கல்கியில் வந்த என் கட்டுரை ] புரியுதா இல்லையா - இகாரஸ் பிரகாஷ் சி ல தினங்களுக்கு முன்பு, நவீன இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளி ஒருத்தர் எழுதிய படைப்பைவாங்கிய போது, கூடவே ஒரு இலவச இணைப்பும் கிடைத்தது. அந்த இலவச இணைப்பு, நீங்கள் நினைக்கிறார் போல ஊதுவத்தியோ, ஊறுகாய் பாக்கெட்டோ, ஜோதிகா ப்ளோ அப்போ அல்ல.ஒரு நாலு பக்க பாம்ப்லட். ஒரிஜினல் பிரதியைப் படித்துப் புரிந்து கொள்ளுவதற்கான விளக்க உரை போல இருந்தது. தேவுடா . இதல்லாம் வேலைக்காகாது என்று ,. வாங்கிய அந்த நூலை ஈசானிய மூலையில் சார்த்திவிட்டு, போகோ சானல் பக்கம் திரும்பிவிட்டேன் தான் என்றாலும், தமிழில் எழுதப் பட்ட ஒரு நவீன இலக்கிய ஆக்கத்தைப் படித்துப் புரிந்து கொள்ள, விளக்க உரை தேவைப்படும் நிலைமை சற்று விசித்திரமாகத்தான் இருந்தது. வெகுஜன பத்திரிக்கைகளின் விசுவாசமான வாசகர் ஒருவர், தன் இரசனையை இன்னும் விஸ்தரிக்கும் கொள்ளும் பொருட்டு, இது போன்ற நவீன இலக்கியத்தின் புரியாத பக்கத்தைப் புரட்டினால், அவருடைய ரீயாக்ஷன் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. புரியாத இந்த வகை இலக்கியங்கள் யாருக்காகப் படைக்கப்படு

விரதம் முடிந்தது

இ ந்த மாதிரி பாராட்டுகளுக்கும் , அங்கீகாரத்துக்கும் ஏங்கிக்கிடக்கிற சென்மம் தான் நானும் என்பதை நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது. விஷயம் ஒன்றும் பிரமாதமில்லை. என் கட்டுரை ஒன்று, இந்த வார கல்கியிலே வெளிவந்திருந்திருக்கிறது. இகாரஸ் பிரகாஷ் என்ற பெயர் தெரியாத என் உறவினர்கள் கூட, கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் என் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, " அட... பிரகாஷ்... நீயா? எழுதவெல்லாம் கூட செய்வியா... " என்று ஆச்சர்யமாக கேட்டு போன் செய்தது இன்னொரு ஜில். கல்கி அல்லது ஆனந்த விகடனில் ஏதாவது ஒன்று பிரசுரமாகாமல் என் வலைப்பதிவு பக்கம் வருவதில்லை என்ற விரதம் இன்றோடு முடிவுக்கு வந்தது. சற்றேறக்குறைய இரண்டாண்டுகளுக்கு முன்பு வரையிலும், இந்தத் திசையில் என் பயணம் அமையும் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. கிளப்பில் மட்டும் எழுதிக் கொண்டிருந்த போது, " இது போதாது.... பத்திரிக்கைகளிலும் எழுத வேண்டும் என்று ஊக்குவித்து, அதற்கான வழிமுறைகளையும், நடைமுறைகளயும் சொல்லித் தந்து... முயற்சி தோல்வியடைந்த போதெல்லாம் ( புலம்பிய போதெல்லாம் என்று வாசிக்கவும்) , காபி சமோசா வாங்கி கொடுத்து உபர

மேய்ச்சல் தொடர்கிறது

16. மெய்யப்பன் : மெய்யப்பனின் பார்வையை சமீபகாலமாத்தான் படித்து வருகிறேன். இவருடைய பதிவுகளைத் தொடர்ந்து படித்து வந்தால், இவரது சார்புநிலைகளை எளிதில் கண்டுகொள்ளலாம். என் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அடிக்கடி எழுதுவார். என்றைக்காவது உபயோகப்படும் என்று வாசித்து வைத்துக் கொள்வேன். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பத்தியை விமர்சித்து ஆரம்பத்தில் வந்த பதிவு மிகவும் பிடித்தது. " i provide an easy target" என்பார் சுஜாதா அடிக்கடி. அது மெய்யப்பனின் வலைப்பதிவு வரையிலும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. கோவர்த்தனன் , ரமணீதரனுக்குப் பிறகு, நான் படித்த, சுஜாதா மீதான பொட்டில் அடித்தமாதிரியான விமர்சனக்குறிப்பு அது. ஆவணத்தில் தேடி எடுத்துப் போட பொறுமை இல்லை. அடிக்கடி எழுதினால் தேவலாம் என்று தோன்றும். புதிதாகப் பிறந்த குழந்தை அவரது மொத்த கவனத்தையும் இன்னேரம் ஈர்த்துக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். வருவார். பின்னால் பார்த்துக் கொள்ளலாம். 17. முத்துராமன் : இவரை நான் முன்னமேயே அறிவேன், உளவியல் மாணவர். கல்லூரி பாடப்புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறாரோ என்று அடிக்கடி

மேய்ச்சல் மைதானம் ( நன்றி : பாலகுமாரன்)

எழுதுவதற்கு விஷயம் இல்லாவிட்டால் எழுதாமல் இருப்பது நல்லது. ஆனால், எழுதாமலே இருந்தால், ப்ளாக்ஸ்பாட் காரர்கள் கோபித்துக் கொண்டு, பட்டாவை கேன்சல் செய்துவிடுவார்களோ என்ற பயமும் இருக்கிறது. இந்த சமயத்தில், கைகொடுப்பது, முன்பு எழுதி, அஞ்சல் செய்யாமல் விட்ட சங்கதிகள். இது போல, அந்தரத்தில் தொங்குகிற ஆக்கங்கள் என்னிடம் ஒரு நாற்பது ஐம்பது இருக்கும். அதில் எதையாச்சும் ரிப்பேர் செய்து போடலாமா என்று நோண்டிக் கொண்டிருந்த போது, ஒரு மடல் மாட்டியது. நான் வலைப்பதிவு ஆசிரியராக இருந்த போது, மற்ற வலைப்பதிவுகளைப் பற்றி எழுதவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து எழுதியது அந்தப் பதிவு. நான் அதை எழுதிய காலத்தில், சுமார் ஏழெட்டு வலைப்பதிவுகளை மட்டும் தான் தொடர்ந்து படித்து வந்தேன். மற்ற பதிவுகளில், பின்னூட்டங்களும் அவ்வளவாகக் கொடுத்ததில்லை. ஆனால், ப்ளாக்லைனர் உதவியால், ஆற்றுமை ( activity) அதிகம் இருக்கும் அனைத்து வலைப்பதிவுகளையும் படித்து வருகிறேன். ஆகையால் முன்பு எழுதி அஞ்சல் செய்யாமல் விட்ட அப்பதிவினை, கொஞ்சம் revamp செய்து இங்கே இடுகிறேன். எச்சரிக்கை 1. : இது நடுநிலைமையான பதிவு அல்ல. நான் வாசிக்கிற வ

Junior Subbudu

Image
a mail from a friend சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு வரையிலும், ராகாகியிலும், மரத்தடியிலும் இசை விமர்சனம் எழுதிக் கொண்டிருந்த லலிதராயர் என்கிற ராமை, புதிதாக தமிழ் இணையத்துக்கு வந்த நண்பர்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. சமீபத்தில் தான் படிப்பை முடித்து விட்டு, பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ரொம்ப வெவரமானவர். வேலை நேரத்தில், வேலையை செய்வதை விடுத்து தமிழில் எழுதுவது, படிப்பது போன்ற 'அடாஸ்' வேலைகளை செய்யமாட்டேன் என்று சொல்கிற அளவுக்கு தொழில் பக்தி கொண்டவர். முதல் மாச சம்பளம் வந்தோடனே, கம்ப்யூட்டர் வாங்கி, மீண்டும் ஜோதியில் கலந்து கொள்கிறேன் என்று அஞ்சு மாசமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். நம்ம ஊர் இசையைப் பற்றி யாராவது (விஷயம் தெரியாமல்) கோக்கு மாக்காகப் பேசினால் போட்டு கிழித்து விடுவார். . அன்னாருடன், அவ்வபோது இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எல்.சுப்ரமணியம், எஸ்.பி.பி , ஓ.எஸ்.தியாகராஜனின் கான்சர்ட் என்று நானும் இன்னும் சில நண்பர்களும், நேரிலும் மடல்களிலும் கதைப்பது வழக்கம். அப்படியாகப் பட்ட ஒரு சுவாரசியமான விமர்சன மடலை ( அவருடைய அனுமதியோடு) இங்கே பகி

Digital Divide

On Dayanthi Maran' Plans & Badri's comments பத்ரி, தன் ஆங்கில வலைப்பதிவில், தயாநிதி மாறனின் சில கருத்துக்கள் பற்றிய தன் அபிப்ராயங்களை எழுதி இருந்தார். தொழில்நுட்பக் கருத்துக்களுடன் , எண்ணியப் பிளவு ( digital divide) பற்றியும் சொல்லி இருந்தார். அது பற்றிய என் சில கருத்துக்கள் இங்கே: கிராமங்களுக்கு கணிணிகளைக் கொண்டு போவது, தன்னுடைய முக்கியான வேலைகளில் ஒன்று என்று தயாநிதி மாறன் அவர்கள் சொல்லி இருக்கிறார். . கணிணியைப் பயன்படுத்துபவர்களுக்கும் பயன்படுத்தாதவர்களுக்கும் இருக்கும் இடைவெளிதான் எண்ணியப் பிளவு. இந்தியா போன்ற ஒரு வளரும் பொருளாதார நாட்டிலே, மற்ற அனைத்து வளர்ச்சிப் பணிகளுடன், இந்த எண்ணிய இடைவெளியைக் குறுக்கிக் கொண்டே போவதும் மிகவும் முக்கியம். ஆனால், இதை எப்படிச் செய்யப் போகிறார் என்பது பற்றி ஏதும் தகவல் இல்லை. இது கொஞ்சம் சிரமமான காரியம் என்று பத்ரி அபிப்ராயப் பட்டிருக்கிறார். என்னுடைய அபிப்ராயத்தில், இது சிரமம் போலத் தோன்றினாலும், கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் திட்டம் தயாரித்தால், கிராமங்களுக்கு கணிணியைக் கொண்டு செல்லலாம். அந்த காலத்தில் சென்னையில் இர

மூன்று விஷயங்கள்

1. இந்த வாரம் திண்ணையில் எனது புதிய கட்டுரை ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்துத் தேவதைகளும் இந்த சிக்கல் எனக்குப் பல முறை நேர்ந்திருக்கிறது. ஒரு ஆக்கத்தைப் படிக்கிறேன். அந்த ஆக்கம் என்னை என்ன செய்கிறது என்பது என் மனதுக்குப் புரிகிறது. ஆனால், அவற்றை விசைப்பலைகை வழியாக உள்ளிடும் பொழுது, அந்த உணர்ச்சி, என்னை அறியாமலேயே சட்டென்று நீர்த்து அல்லது மறைந்து போய்விடுகின்றது. நினைக்கிற வேகத்துக்கும் எழுதுகிற வேகத்துக்கும் இருக்கும் இடைவெளிதான் காரணம் என்று நண்பர் ஒரு முறை சொன்னார். அந்த சமயங்களில், அந்த உணர்வுகளை எழுதுவதைக் காட்டிலும், வாசித்ததை மனதுக்குள்ளாகவே அசை போட்டு, அந்தரங்கமாக இன்பம் அடைவது மேலானதாக அல்லது என்னால் இயலக்கூடிய காரியமாகப் படும். சில சமயம் காத்திருப்பேன். யாராவது ஏதாவது சொல்கிறார்களா என்று. சொன்னால் அவர்களைப் பின் தொடர்ந்து செல்வது. ஸ்ரீரங்கத்து தேவதைகளைப் பொறுத்த மட்டில், சென்ற வாரம் திண்ணையில் எழுதிய திரு. ஜெயமோகன் அவர்களின்....... மேலே படிக்க 2. சும்மா பொழுது போகாமல் வலையில் மேய்ந்து கொண்டிருக்கும் போது கண்டதும் மாட்டும். சில வெறுப்பேற்றும். சில கிச்சு கிச்சு மூட்டும், அ

ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே.....

இந்த வார 'நேசமுடன்' இதழிலே, செல்லம்மா பாரதி எழுதிய நூல் பற்றி ஆர்.வெங்கடேஷ் எழுதியிருந்ததைப் படித்ததும், ரா.காகியில் நடந்த பழைய கருத்துப் பரிமாற்றம் நினைவுக்கு வந்து விட்டது. நடந்தது, 2003 மார்ச்சில். கேள்வி: அது சரிங்க ஹரி சார், பாரதி , செல்லம்மா மீது மாறாக் காதல் கொண்டிருந்தான் என்பது சரி? இதிலே செல்லமாவோட பார்வை என்ன? படிச்சதிலேயும் , கேள்விப்பட்டதிலேயும் , பாரதி வாழ்ந்த கால கட்டத்துலே, எல்லாரும் அவரை, 'என்ன ஓய் ன்னு எகத்தாளமா கூப்பிட்டவங்கதான் அதிகம்ன்னு தெரிய வரது . அப்படிப்பட்ட சூழ்நிலையிலே, செல்லம்மா என்ன நெனைச்சாங்க? என் புருஷன் ஒரு மகாகவிங்கறஒரு பெருமிதம்? இன்னா ஒரு எக்செண்ட்ரிக் மாதிரி இருக்கானேங்கற ஒரு மிரட்சி? கட்டிக்கிட்டோம், இனி இவன் தான் எனக்கு எல்லாம் என்கிற ஒரு மரபு வழிவந்த ஒரு கட்டுப்பாடு? என் மேல இவ்ளோ அன்பான்னு ஒரு வியப்பு ? அப்படியே அவங்களுக்கும் இது மாதிரியே அன்பு காதல் இருந்ததுன்னா அதை அவங்க reciprocate செஞ்சாங்களா? what is chellamma's perspective? ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளின் துவக்கத்தில் இரு