Posts

Showing posts from July, 2006

writ petition against Tata Indicom Broadband

கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்பு, அரசாங்கம் சில இணையத்தளங்களுக்குத் தடை விதிக்கச் சொல்ல, இணையச் சேவை வழங்கிகள், அப்படிச் செய்யத் 'தெரவுசு' பற்றாமல், மொத்த வலைப்பதிவுகளையும் போட்டுத்தள்ளியது. ( இந்தப் பதிவின் கடந்த மூன்று இடுகைகளைப் படித்தால் விளங்கும்) பிரச்சனை பெரிதானதும், அரசே, " சில இணையத்தளங்களை மட்டும் தான் நாங்கள் தடை செய்யச் சொன்னோம், மொத்தமாக அல்ல" என்று சொல்லி, தடையை நீக்கவேண்டும் என்று இணையச் சேவை வழங்கிகளுக்குச் சொன்னாலும், அவர்கள் இன்னமும் தடையை நீக்கவில்லை. தற்போது, சில நகரங்களில், சில இணைய வழங்கிச் சேவைகள் தடையை நீக்கி இருக்கிறார்கள். எந்த எந்தச் சேவைகள், எந்த எந்த நகரங்களில், தடையை நீக்கியிருக்கிறார்கள் என்பது பற்றி குழப்பமான நிலைமை நீடிக்கிறது. சென்னையிலும் கூட, ஏர்டெல் அகலப்பாட்டை, தடையை நீக்கியிருப்பதாகத் தெரிகிறது. நான் உபயோகிக்கும், டாடா இண்டிகாம் இணையச் சேவை, இன்னும் ப்லாக்ஸ்பாட் மீதான தடையை நீக்கவில்லை. எப்போது நீக்கும் என்ப்று தெரியவில்லை. கேட்டாலும் முறையாக பதில் கிடைப்பதில்லை. ஆகவே, தடையை நீக்கக் கோரி, ரிட் மனு ஒன்றை, வழக்கறிஞர் மூலமாக தாக்கல்

சிம்ரனின் 'இடை' நவீனத்துவமும், சில கவிதைகளும்

முந்தைய பதிவுகளின் ( ஒன்று , இரண்டு & மூன்று ) தொடர்ச்சியாக.... இது வரை நடந்த சம்பவங்களின் தொகுப்பின் சுருக்கம் கீழே.... 1. கடந்த சனிக்கிழமை அன்று, இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் இருந்து, தற்போது இயங்கிவரும் நூற்று ஐம்பது இணையச் சேவை வழங்கிகளுக்கு ஒரு உத்தரவு பறந்தது. மும்பை குண்டு வெடிப்பு தொடர்பின் விளைவாக, இந்திய அரசு, 18 இணையத்தளங்களை தடை செய்யக் சொல்வதுதான் அந்த உத்தரவின் சாராம்சம். அந்த பட்டியலில், ப்லொக்ஸ்பாட்டில் இயங்கும் சில தளங்களும் இருந்தன. சில குறிப்பிட்ட வலைப்பதிவுகளை மட்டும் தடை செய்ய வழி இல்லை என்பதால் ( அல்லது அவர்களுக்குத் தெரியாது என்பதால்) ஒட்டு மொத்தமாக ப்ளாக்ஸ்பாட்டில் இயங்கும் அனைத்து வலைப்பதிவுகளையும் பார்க்க தடை விதித்து விட்டார்கள். 2. இந்த உத்தரவைப் பிறப்பிக்கக் காரணமாக இருந்த Computer Emergency Response Team - India ( CERT-IN),இன் உயரதிகாரி, இது தொடர்பாக எந்த விளக்கமும் தர மறுத்து விட்டதோடல்லாமல், " நீ யாரு இதை எல்லாம் கேட்க? " என்கிற ரீதியில் பதிலளித்தார்கள். 3. முதலில், சில இணையச் சேவை வழங்கிகள் மட்டும், வட இந்தியாவில் முதலில் இந்தத்

சென்னையிலும் கோயிந்தா...

இதோ, இதோ என்று பி.எஸ்.என்.எல் ல்லும் ஒட்டுமொத்தமாக, ப்ளாக்ஸ்பாட்டில் இருக்கும் வலைப்பதிவுகளைத் தடை செய்து விட்டது.. இந்தச் சிக்கல் தீரும் வரை, என்னுடைய வலைப்பதிவு, புதிய இடத்தில் தொடரும். http://icarus1972us.wordpress.com/

Blogspot.com ban, Next in Chennai?

முந்தைய பதிவு மும்பை, தில்லியைத் தொடர்ந்து, ஏர்டெல் இணையச் சேவை, பெங்களூரிலும், ஹைதராபாத்திலும், வலைப்பதிவுகளைத் தடை செய்திருக்கிறது. geocities.com தளமும் தடை செய்யப்பட்டிருக்கிறது. சுட்டி 1 , சுட்டி 2 அடுத்தது அனேகமாகச் சென்னை? இன்னமும், அமைச்சகத்திலிருந்தோ, தொலைத் தொடர்புத் துறையிலிருந்தோ, எந்த அறிவிப்பும் வரவில்லை. தொடர்பு கொண்டு பேசுகிறவர்களுக்கும் சரியாக பதில் தர மறுக்கிறார்கள். தில்லியில் இருந்து ஷிவம்விஜ் , விடாப்பிடியாகத் தொடர்ந்து சென்று கேட்டிருக்கிறார். அரசுத்துறைக்கே உரித்தான, "எனக்குத் தெரியாது, அவரைக் கேளுங்க" என்ற ஸ்டீரியோடைப் பதில்களை எல்லாம் கடந்து, இந்தப் விஷயத்தில் பதில் சொல்ல வேண்டியவரான உயர் அதிகாரி, டாக்டர்.குல்ஷன் ராய் ( CERT-IN இயக்குனர்) அவர்களிடம் கேட்ட போது கிடைத்த பதில், "Somebody must have blocked some sites. What is your problem?" சென்னையிலும் போட்டுத் தள்ளினால், எல்லாரும் முழித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். 1. Right to Information Act மூலமாக, எப்படி இந்த விஷயத்தில், தகவலைப் பெறுவது என்பதற்கு ஒரு உருப்படியான வழியைச் சொல்கிறார்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

கடந்த இரண்டு நாட்களாக, இந்தியாவில், சில இணையச் சேவை நிறுவனங்கள், blogger.com, blogspot.com போன்ற வலைப்பதிவுச் சேவைகளைத் தடை செய்திருக்கின்றன . வலைப்பதிவுகளை பார்க்க முடியாமல், தன்னுடைய இணையச் சேவை வழங்கியை, தில்லியில் இருந்து வலைப்பதியும் மிருதுளா விசாரித்த போது , அரசு உத்தரவு என்று பதில் கிடைத்திருக்கிறது. இந்தத் தடையினால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் இது குறித்து விரிவாக வலைப்பதிந்திருக்கிறார்கள். தற்போது கிடைத்திருக்கும் நிலவரப்படி, இணையச் சேவையை வழங்கும் தனியார் நிறுவனங்களான Reliance Infocom, Star Hathway, Tata Internet Services ,Exatt, Spectranet போன்றவையும், பொதுத்துறை நிறுவனமான MTNL உம் தடையை அமுல் செய்திருக்கின்றன. பெங்களூரில் இருந்து அபிநந்தன், spectranet என்கிற் ISP ஐ, தொலைபேசியில் அழைத்து விசாரித்த போது, அரசிடம் இருந்து தடை செய்யக் கோரி அறிக்கை வந்தது என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். எதற்காக இந்தத் தடை என்று சற்றும் விளங்கவில்லை. அரசு, வலைப்பதிவுகளைத், இணையச் சேவை வழங்கிகள் மூலமாகத் தடை செய்ய வேண்டும் என்று நினைத்தால், அது முதலில் ஆர்டர் போடுவது, BSNL க்காகத்தான் இர