Posts

Showing posts from October, 2005

காற்றில் கலந்தே விட்ட பேரோசை...

எனக்கும் புரிகிற மாதிரி எழுதுகிற நவீன இலக்கியவாதிகள் பட்டியலில் முதலாவதாக இடம் பெற்றிருந்தவர் சு.ரா. Pulmonary fibrosis நோயின் காரணமாக அவர் இல்லாமலே போய்விட்டாலும் கூட குறிப்பிட்ட அந்த முதலிடம் என்றுமே வெற்றிடமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. இணையத்துக்குள் நுழைந்த புதிதில், ( ஆகஸ்ட்/செப்டம்பர் 2002) நண்பர்களுடன் சந்திப்பு என்கிற சாக்கில் முதன் முதலாக இலக்கியச் சந்திப்பு ஒன்றில், சு.ராவைப் பார்த்ததும், கேள்வி நேரத்திலே, துண்டுக்காகிதத்திலே எழுதி வைத்து அபத்தமாகச் சில கேள்வி கேட்டு, அதற்கு அவர் பொறுமையாக பதில் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. இன்றைக்கும் கூட, நவீன இலக்கியத்தின் முகவரியாக இருக்கும் " ஜே.ஜே.சில குறிப்புக்கள்" நாவலைப் பற்றி நண்பர்களுடன் பேசிப் பேசி, எழுதி எழுதி மாய்ந்தது நினைவுக்கு வருகிறது. சு.ராவின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். சு.ரா குறித்து சென்ற வருடம் ஒரு இணைய இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி .. சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள் முன்னுரை சுந்தர.ராமசாமி அவர்களின் எழுத்துக்களை, அதன் கருத்து மதிப்பை விட, அதில் இழையோடும் நகைச்சுவைக்காகவு

IIPM vs Gaurav Chabnis & fellow bloggers

1. Arindam Chaudary என்கிற ஒரு டுபாகூர் ஆசாமி, ஒரு எம்பிஏ பட்டங்கள் விற்கும் கடை ( Indian Institute of Planning Management ) ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கல்வி நிறுவனம், பலரது விமர்சனங்களுக்கும் ஆளாகி இருக்கிறது. சமீபத்திலே, economic times ஆங்கில நாளிதழில் வந்த செய்தியின் படி, இவர் விளம்பரங்களுக்காக செலவு செய்தது 5.1 கோடி ரூபாய்கள். இத்தனைக்கும், இவரது கல்வி நிறுவனம் வழங்கும் பட்டங்கள் இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றவை அல்ல. 2.பொதுவாக, தேசிய நாளிதழ்களில் முழுப்பக்கத்திலே விளம்பரங்கள் வரும். அவருடைய claims நம்பமுடியாதவையாக இருக்கும். பட்டங்களில் விலை சில லட்சங்கள். அதை வைத்து நாக்கு வழிக்கக் கூட முடியாது என்று படித்து முடித்த பின்புதான் தெரியும். இதிலே சம்பாதித்த பணத்தை வைத்து, அரிந்தாம், சன்னிதியோல் நடித்த படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டார். பல கோடி ரூபாய்கள் நஷ்டம் ஆனது 3. மும்பையில் இருந்து வெளிவரும் JAM என்கிற ஆங்கிலப் பத்திரிக்கையை நடத்துபவரும், business world ஆங்கிலப் பத்திரிக்கையில், பத்தியாளருமான ( columnist) ரஷ்மி பன்சால், தன்னுடைய பத்திரிக்கையிலே, IIPM பற்றிய தில்லு

கோ.கு.ப.பட்டறை - இறுதிப்பகுதி

Image
இரண்டாம் நாள், இயக்குனர் அருண்மொழி அவர்கள் காமிரா குறித்த அடிப்படை விஷயங்கள் பற்றி பாடம் நடத்தினார்.அருண்மொழி சென்னைத் திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவாளராக பயிற்சி பெற்றவர். காணிநிலம், ஏர்முனை என்று இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அருண்மொழியின் விளக்கங்கள் மிகத் தெளிவாக இருந்தது. திரையிலே சில காட்சிகளை காண்பித்து நேரடியாக விளக்கம் அளித்தார். புரிந்து கொள்ளச் சிரமமாக இருந்த விஷயங்களை, அவரே படம் பிடித்து அப்போதே திரையில் போட்டுக் காட்டி விளக்கினார். மேடையிலே நின்று கொண்டு மட்டுமே உரை நிகழ்த்தாமல், அங்கங்கே மாணவர்களிடம் வந்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக விளக்கம் அளித்தார். காமிரா கோணங்கள் பற்றி நன்றாகப் புரிந்த மாதிரி இருந்தது. பிறகு கேள்வி நேரம். மதிய உணவுக்குப் பின், குழுவுக்கு ஒரு காமிராவைக் கொடுத்து அனுப்பி வைக்க, நாங்கள் எங்கள் குழுவினர் என்ன எடுக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் இறங்கினோம். முதலிலே குறும்படம் எடுக்கலாமா அல்லது ஏதாவது ஒரு ஆவணப்படம் எடுக்கலாமா என்று சிந்தித்து, குறும்படம் எடுப்பதுதான் எளிது என்று முடிவு செய்தோம். சிவகங்கையில் இருந்து வந்திருந்த பா

வாழ்க பாரதம்.!!!!

நேற்று விட்டதைத் தொடருவதற்கு முன்னால், சும்மா வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது இந்தச் செய்தி ( செந்தில் வழியாக ) படிக்கக் கிடைத்தது. சும்மா சொல்லக் கூடாது பெங்களூர் நன்றாகவே 'முன்னேறிக்' கொண்டிருக்கிறது.. வாழ்க பாரதம்...

கோவை குறும்படப் பயிற்சிப் பட்டறை - முதல் நாள்

Image
சேரன் எக்ஸ்பிரஸில் அடுத்த இருக்கையில் இருந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு, குறும்படம் என்றால் என்ன என்று விளக்க முயற்சித்து தோற்றமையும், கோவையில் இறங்கியதுமே, எதிர்ப்படுகிறவர்களின் முகத்திலேயே தெரியும் hospitality உம், பட்டறை நடக்கும் கணுவாய் என்கிற கிராமத்துக்குச் சரியாக வழியைக் காட்டி, பேருந்தில் ஏற்றிவிட்டு, சிக்கல் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்று செல்பேசி எண்ணைக் கொடுத்த Gangotri Textiles என்ற நிறுவனத்திலே பணிபுரியும் அன்பர் ஒருவரின் இன்ஸ்டண்ட் நட்பும், இன்னபிற விஷயங்களும் இந்தக் வியாசத்துக்கு அநாவசியம். ஆகவே நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். தமிழ்நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட படைப்பாளிகள் சங்கமும், குறும்பட ஆர்வலரும் இயக்குனருமான திருநாவுக்கரசு அவர்களின் நிழல் பத்திரிக்கையும் இணைந்து, ஒரு குறும்படப் பயிற்சிப் பட்டறையை, செப்டம்பர் 30, அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில், கோவைக்கு அருகே கணுவாய் என்கிற இடத்திலே நடத்தியது. குறும்படங்களில், ஆர்வமிருந்து, ஆனால், அனுபவமில்லாதவர்களை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சியை, குறைந்த கட்டணத்திலே ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், குறும்படம்

மூன்று நாட்கள்.

Image
மூன்று நாட்களாக பயிற்சிக்குப் போயிருந்த கதை WLL இல் இருந்த பயணச்சீட்டு, RAC க்காவது நகரும் என்று நம்பிக்கையில் செய்த முன்பதிவு ஏமாற்றி விட, 'எப்படியாவது' நீலகிரி எக்ஸ்பிரஸின் TTE இடம், berth வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையும் பொய்த்துவிட, ஞாயிறு இரவு முழுதும், கோவையில் இருந்து சென்னை வரை கழிவறைக்குப் பக்கத்தில் , suitcase மீது அமர்ந்து செய்த பிரயாணத்தின் களைப்பு இன்னும் தீரவில்லை. ஆகவேண்டிய வேலைகளும் இருக்கின்றன. எழுத இன்னும் ஒன்றிரண்டு நாட்களாகலாம். முதலில் படங்கள். விவரங்கள் பிறகு.