Posts

Showing posts from November, 2005

படித்ததில் பிடித்தவை

கொஞ்ச நாளாகவே நான், எழுதுவதை நிறுத்தி விட்டு படித்துக் கொண்டிருக்கிறேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், வலைப்பதிவுகள் ரொம்பவே போரடிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், இரண்டு வருடங்களாக தொடர்ந்து வாசித்து வந்ததில் இருந்து, எந்தப் பிரச்சனையில் யார் என்ன எழுதுவார்கள் என்பதை முன்கூட்டியே ஊகித்து விட முடிவதுதான். நாளை, ரஜினிகாந்துக்கு சந்திரமுகி படத்துக்காக தேசிய விருது கிடைத்து விட்டது என்று அறிவிப்பு வந்தால், அடுத்த சில நாட்களுக்கு, வலைப்பதிவுகளில் யார் யார் என்ன எழுதுவார்கள் என்று ஊகிப்பது வெகு சுலபம். அடிப்படையில் வாசகனாகவும், எதேச்சையாக எழுத வந்தவனுமாக இருக்கிற எனக்கு, இந்த டெம்ப்ளேட் தன்மை மிகுந்த சலிப்பை உண்டு செய்கிறது. அதையும் மீறி தொடர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ......இஷ்ட்டாப்ப்ப்ப்.. ரொம்ப ஓவரா சீன் போடறேன் போலிருக்கு... ஆரம்பம் இங்க மேட்டர் என்னன்னா, கொஞ்ச நாள் முன்னாடி வரை, பத்மப்ரியான்னு ஒரு அம்மிணி வலைப்பதிவுல, கதை எழுதிட்டு இருந்தாங்க.. தொடர்கதை எல்லாம் படிச்சு ரொம்ப நாளாச்சு.. இருந்தாலும், நினைவுப்பெட்டகம் னு ஒரு தொடர்கதையை விடாமப் படிச்சு வந்தேன். இப்ப தி

மறந்தே போச்சு..... ரொம்ப நாள் ஆச்சு

Image
தமிழ் தட்டச்சு டச் விட்டுப் போகக்கூடாதுங்கறதுக்காக அவசரமா அவசியமா இந்தப் பதிவு. எழுதணும்னு நினைச்சு, மனசின் ஓரத்திலே போட்டு வெச்ச விஷயங்களின் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது.. எழுதியிருக்க வேண்டிய பதிவுகள் அனைத்தையும் , சுருக்கமா ஒரே பதிவிலே இங்கே எழுதறேன். .... 1. மரவண்டு கணேஷ் நடத்தின போட்டியிலே புத்தகப் பரிசு பெற்ற கார்த்திக் ராமாஸ், தன்னுடைய சார்பா, என்னை அந்தப் புத்தகம் வாங்கிக்கச் சொன்னார் . நானும் ரொம்ப பிகு செய்யாம வாங்கிகிட்டேன். காரணம், அது பிரமிள் எழுதின கட்டுரைத் தொகுதி. இதுக்கு முன்னாடி பிரமிள் எழுதின புத்தகம் ஏதும் படிச்சதில்லை. இதை படிச்சு முடிச்சதும், சும்மா அப்படியே உருவி விட்ட மாதிரி ஆயிடுச்சு. புதிய சொல்லாடல்களால், மொழி நடையால் என்னை அதிகம் ஈர்த்தவர் காலம் சென்ற சு.ரா. பிரமிளும் அதே வரிசையில் , குறைந்த பட்சம் என்னளவில், வருகிறார். வெகுசன ஊடகங்ககளில் பிடியில் இன்னும் சிக்காமல் மிக நவீனமாக அதே சமயம் உயிர்ப்புடன் எழுதி வலையில், மேற்படி இடங்களிலும் உலாவரும் சில 'strictly-for-private-circulation' எழுத்தாளர்கள் எங்கிருந்து புறப்பட்டு அல்லது எந்த வழியாக பயணப்பட்டு