Posts

Showing posts from January, 2006

கடிதங்கள்.

முதலிலே டீசே தமிழன் எழுத, பிறகு செல்வராஜும் தொடர்ந்து எழுத, எனக்கும் கை சும்மாயிருக்கவில்லை. பிறரிடம் பகிர்ந்து கொள்ளுகிற மாதிரியான கடிதங்கள் எனக்கு வந்திருக்கிறதா அல்லது நான் யாருக்காவது எழுதியிருக்கிறேனா என்று எத்தனை யோசித்துப் பார்த்தாலும் எனக்கு நினைவுக்கு வரவில்லை. ஆனால், பதிவு போட்டு சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில், யாருடைய தொந்தரவும் இன்னும் கொஞ்ச நேரத்துக்கு இருக்காது என்ற உத்தரவாதமான சூழ்நிலையில், இந்த மாதிரி ஒரு 'bloggable idea' வை தூக்கி தூரப் போடவும் மனசில்லை. பேனா பிடித்து தமிழில் எழுதியது கல்லூரி நாட்களோடு போயிற்று. பரீட்சைக்குக் பணம் கட்ட, மெஸ் பில்லுக்கு, புத்தகங்கள் வாங்க என்று பணம் கேட்டு எழுதிய நாட்களில் சங்கப் பாடல்களில் இருந்தோ, ஆத்மாநாமின் கவிதைகளில் இருந்தோ மேற்கோள்கள் தேவைப்படவில்லை. பணத்துக்கும், கவித்துவத்துக்கும் தூரம் அதிகம். கவரிலே வரைவோலையை வைத்து, கூடவே, ' ஒழுங்காப் படி' என்று அப்பா எழுதியதிலும் கவலையுடன் கூடிய மிரட்டல் தான் இருக்கும். விடுமுறயின் போது சந்திக்கும் நண்பர்களும் கடிதம் எழுதுகிற ஜாதி இல்லை. ஆக, என் கடிதங்கள், உலகாயத நோக்கம் கெ¡

North Madras பசங்க

இந்தப் பெயரிலே ஒரு திரைப்படம் வருகிறது என்று இன்று தினத்தந்தியில் விளம்பரம் பார்த்தேன். GV Films தயாரிக்க, Harris ஜெயராஜ் இசை அமைக்கிறார். விளம்பரத்தைப் பார்த்த உடனே புரிந்து விட்டது. முன்பெல்லாம், ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால், அதன் பாதிப்பில், பல திரைப்படங்கள் வெளிவரும். பல வருடங்களுக்கு முன்பு வந்த எண்ணற்ற ராமராஜன் படங்களும், விஜயகாந்த் படங்களும் இதில் அடக்கம். இப்போதெல்லாம், ஒரு திரைப்படம் உருவாக்கத்தில் இருக்கும் போதே, அதன் கதையை, களத்தை ஒட்டி திரைப்படங்கள் வரத் துவங்கிவிட்டன. சந்தேகமில்லாமல், வடசென்னை, திரைப்படத்துக்கு ஏற்ற வசீகரமான பின்புலம். இந்த வாழ்க்கையை ஒட்டி புதினங்களோ, திரைப்படங்களோ அதிகமாக இல்லை. இந்த வாழ்க்கை குறித்து, நாராயண் அருமையான பதிவு ஒன்றை எழுதியிருந்தார். [ இந்தப் பதிவை படித்துவிட்டு, ஒரு பிரபல தமிழ் நாளிதழ் ( தினமலர் அல்ல) தங்களுடைய பதிப்பில், இதனை மறுபிரசுரம் செய்யக் கேட்டது என்றும், 'உருப்படாதவர்' மறுத்துவிட்டார் என்று ஒரு வதந்தி உலவுகிறது தெரியுமா? :-) ]. தென்சென்னையில், குறிப்பாக, மயிலைப் பகுதியில் இளவயது முழுவதையும் கழித்த எனக்கு வடசென்னை வ

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

Image
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா சொன்ன பேச்சை கேட்டாத்தான் நல்ல பாப்பா சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா திங்க உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா சிலுக்கு சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா கண்ணா மூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா அப்போ கலகலன்னு சிரிச்சிகிட்டு என்னைப் பாரம்மா சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா கோவம் தீந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு கோழி மிதிச்சு குஞ்சு முடம் ஆகிவிடாது உனக்கு கொய்யாப் பழம் பறிச்சுத் தரேன் அழுகக் கூடாது சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா பாட்டை இணையத்தில் இருந்தால், யாராவது இணைப்பு கொடுக்கவும். [படம் உதவி : வி.ஏ.நரேந்திரன்]

போர்னோகிரா·பி

அண்ணா பல்கலைக்கழக விடுதியில் ரெய்ட் நடந்த போது, போர்னோகிரா·பி படங்களை, கணிணியில் பார்த்துக் கொண்டிருந்த நான்கு மாணவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டார்கள். அவர்கள் நால்வரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இது இன்று ஹிந்துவில் வந்திருக்கும் செய்தி . போர்னோகிரா·பி பார்ப்பது, படிப்பது போன்றவை, அண்ணா பல்கலைக்கழக விடுதியின் விதிமுறைகளுக்கு உட்படாததாக இருக்கலாம். ஆனால், அந்தத் தவறுக்கு சஸ்பெண்ட் செய்வது, அந்த மாணவர்களின் வாழ்க்கையில் எத்தனை மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் சரியாக உணரவில்லை. தமிழகத்தைப் பொறுத்த மட்டில், அண்ணா பல்கலைக்கழகம், ஒரு முதன்மையாக கல்வி கேந்திரம். தொழில்நுட்பக் கல்வியை எடுத்துப் படிக்க நினைக்கிற பெரும்பான்மையானோர் தேர்ந்தெடுப்பது கிண்டி செல்கிற பாதையைத்தான். அப்படிப்பட்ட ஒரு கல்விக்கூடத்திலே சேர, சிரமப்பட்டுப் படித்து,இரவு பகல் பாராது உழைத்து, நுழைவுத்தேர்விலே தேர்ச்சி பெற்று, வருங்காலத்தில் ஒரு பொறியாளராகலாம் என்று எண்ணத்துடன் இருக்கும் இருபதின் ஆரம்பத்தில் இருக்கும் இளைஞர்களை, ஆபாசப்படம் பார்த்த காரணத்துக்காக, தற்காலி

குழந்தை, ஆண், பெண் & பெருசு

ஆண் என் நண்பன். பெண், அவனது மனைவி. பெருசு, அவனது நைனா. குட்டிப் பிசாசு அவனது குழந்தை. அவன், கிராமத்தில் இருந்து, சென்னைக்கு வருஷத்துக்கு ஒரு முறை வருவான். இந்தோனேசியாவில் இருக்கும் ஏதோ, வாயில் பெயர் நுழையாத ஒரு கிராமம். நைனாவுக்கு, ஈமெயில் அனுப்ப, சாட் செய்ய சொல்லித்தருவது, நான் அவ்வவ்போது போய் வருவது வழக்கம். இந்த முறை வந்த போது, வீட்டுக்குப் போனேன். குழந்தை கால் மேல் கால் போட்டுக் கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தது. நைனா தரையில் அமர்ந்திருந்தார். நின்று கொண்டிருந்த அவனது மனைவிக்கும், குழந்தைக்கும் சின்ன வாக்குவாதம். "அது என்னடி மரியாதை இல்லாம கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்கிறே...காலை நீட்டிகிட்டு உக்காரு.." "ஏன், இப்படி உக்காந்தா என்ன தப்பு?... " என்று எசப்பாட்டு பாடிய அந்தக் குழந்தைக்கு வயசு ஐந்து. "வாய் மேலேயே போடுவேன்.எதுத்து எதுத்து பேசிகிட்டு...தாத்தா கீழ உக்காந்திருக்கறப்ப, இப்படி காலை ஆட்டிகிட்டு உக்காறது தப்பு.. இறங்கு கீழே.." குழந்தை இறங்கவில்லை... தாத்தாவைப் பார்த்தது... "ஏன் தாத்தா. நான் இப்படி கால் மேலே கால் போட்டு ஆட்டிகிட்டே டீவ

செ.பு.க.காட்சியில் வாங்கிய புத்தகங்கள்

indibloggies தேர்தலில் வெற்றி பெற்ற முகமூடிக்கு வாழ்த்துக்கள். தமிழ்மணத்துக்கு ஓட்டு போட்ட 127 பேருக்கு நன்றிகள். சென்னை புத்தகக் கண்காட்சி சென்ற முறை போல அத்தனை ருசிக்கவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. இருமுறை சென்று சுற்றியதில், புதிய வரவுகள் அதிகம் இல்லை என்பது போலத் தோன்றியது. வாங்கிய புத்தகங்கள். ஹாலிவுட் அழைக்கிறது - லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் - கிழக்கு கோலிவுட் பற்றிய கனவு காண்பவர்களை வெறுப்பேற்றும் அழகான முயற்சி. ஹாலிவுட் பற்றிய, நிறைய உருப்படியான, கேள்விப்பட்ட, கேள்விப்படாத தகவல்கள். நடையில் வழக்கமான துள்ளல் இல்லை ( ஓரிரு இடங்கள் தவிர்த்து). காதோரம் மடித்து விட்டு பிறகு படித்துக் கொள்ளலாம் என்று நினைக்கா வண்ணம், ஒரே மூச்சில் படிக்கலாம். value for money கண்ணீரும் புன்னகையும் - முகில் - கிழக்கு ஜே.பி.சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய நல்லதொரு ஆவணம். முகிலின் உழைப்பு பல இடங்களில் தெரிகிறது. தேர்ந்த எழுத்தாளர் போன்ற நடை. சந்திரபாபுவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய இடங்கள் தனியாகத் தொங்குகிறது. சந்திரபாபு - சாவித்திரி affair குறித்து குறைந்த பட்சம் ஒரு அத்தியாயமாவது எழுதியிருக்க வேண்டும

மார்க்கெட்டிங் மாயாஜாலம் - அறிமுகம்

Image
புத்தகங்கள் வாங்குவதில் நான் கடைபிடிக்கும் முக்கியமான உத்தி, உடனடியாக படிக்கத் தூண்டும் புஸ்தகங்களை மட்டும் வாங்கி, உடனடியாகப் படித்து விடுவது. குண்டு புஸ்தகங்களின் விலையில், அழகில் மயங்கி, வாங்கி, அலமாரியை ரொப்புவதில், உடன்பாடு இருப்பதில்லை. அப்படி, இந்த வருடம் செ.பு.க.காட்சியில், கிழக்கின் வெளியீடாக வந்திருக்கும் புத்தகங்களில், என் டேஸ்ட்டுக்குத் தேறியவை மிக மிகச் சிலவே. D-60 இன் புதிய வெளியீடாக வந்திருக்கும், மார்க்கெட்டிங் மாயாஜாலம், ஒரு நல்ல புஸ்தகம் என்று சொல்வது understatement. இந்தப் புத்தகத்தை, துட்டு கொடுத்து வாங்கி, ஒரு மூலையில் உட்கார்ந்து பாராயணம் செய்தால், மார்க்கெட்டிங்கில் ஓஹோவென்று ஜொலிக்கலாம் என்று சொல்வது மிகை. ஆனால் ஏதாச்சும் சொல்லியே ஆகவேண்டும். என்ன சொல்வது? படித்து முடித்ததும் எனக்குத் தோன்றிய முதல் அபிப்ராயம், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி , போட்டு பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் என்பதே. Extraodinary work. ஒரு இடம் கூட தொய்வடையாமல், buzzwords போட்டு போரடிக்காமல், நீள நீள அத்தியாயங்கள் இல்லாமல், சொல்ல வந்ததை, சுவாரசியமாகச் சொல்லி இருப்பது, இம்மாதிரி முயற்சிகளின் வெற்றிக்க

தேர்தல் துவங்கியது..

முந்தைய பதிவு இந்தச் சுட்டியை பின் தொடர்ந்தால் , மற்ற விவரங்கள் கிடைக்கும். ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், சந்தேகங்கள் இருந்தால், அங்கே இருக்கும் பின்னூட்டப் பெட்டியிலே கேட்கலாம். மறக்காம ஓட்டு போடுங்க..

கில்லி - திரைப்படமல்ல..

கில்லின்னா என்ன? இதைக் கொஞ்சம் பாருங்க , அதுக்குப் பிறகு, இதையும் பாருங்க... இப்ப ஓரளவுக்கு புரிஞ்சிருக்கும்... A personal filter for tamil blogs and blogs in english with a distinct tamil flavour . இன்றைக்கு, ஆங்கில வலைப்பதிவுகளுக்குப் பிறகு, அதிக எண்ணிக்கையில் இருப்பது, தமிழ் வலைப்பதிவுகள் தான். இன்னும் இன்னும் சொல்லப் போனால், இந்திய மொழிகளில், அதிக எண்ணிக்கையில் இருப்பது தமிழ் வலைப்பதிவுகள். நல்ல பதிவுகளைத் தொடர்ந்து படித்து, பாதுகாத்து, பிறருக்குக் காட்ட, ஒரு கிட்டங்கி வேண்டும் என்று நினைத்தேன். இந்தப் பதிவு முழுக்க முழுக்க, நானும் இன்ன பிற பங்கேற்பாளர்களும் (தற்போதைக்கு பாலாஜி மட்டும் ) ரசிக்கிற பிற சுட்டிகளின் சேகரம் மட்டுமே. இதிலே original content ஒரு சதவீதத்துக்கும், குறைச்சல் என்பதாலும், நாளொன்றுக்கு பதினைந்து முதல் இருபது பதிவுகள் இடம் பெறும் என்பதாலும், தமிழ்மணத்திலோ , நந்தவனத்திலோ சேர்ந்து ஓசியாக site traffic பெறுவது போங்காட்டம். பட்டியல் முழுக்க கில்லி பதிவுகளே இருந்தால், கோவையில் அனேகமாக இன்னொரு குண்டு வெடிக்கலாம் :-) ஆகவே, கில்லியை எப்படி தொடர்வது, பின்னூட்டங்கள் அளி

போடுங்கய்யா ஓட்டு...

இது வரப்போகும் சட்டசபை தேர்தல் - 2006 பற்றிய இடுகை அல்ல. வலைப்பதிவுகள் தேர்தல். விளக்கமாகத் தெரிந்து கொள்ள இந்தச் சுட்டியை சொடுக்கவும்.. இந்த வருடம். பல்வேறு தலைப்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதிலே, சிறந்த வலைத்திரட்டிக்கான விருதில், 'தமிழ்மணம்' nominate செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் இன்னும் துவங்கவில்லை. தமிழ்மணத்துக்கு ஓட்டு போட்டு, வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பகிரங்கமாக கேட்டுக் கொள்கிறேன். அதற்கு எனக்கு சில personal காரணங்கள் உண்டு. ஆனால், அந்தக் காரணங்களை ஒதுக்கிவிட்டு, இந்தத் தேர்தலில் கலந்து கொள்ளும் மற்ற வலைப்பதிவுத் திரட்டிகளை, நன்கு ஆராய்ந்து பார்த்தால், தொழில்நுட்ப ரீதி, திரட்டியின் வேகம், ஒரிஜினல் ஐடியா, பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி, என்று பல்வேறு விதமான தன்மைகளால், வசதிகளால், தமிழ்மணமும், தமிழ்மணத்தின் அடுத்த கட்டமான நந்தவனமும் சிறப்பானது என்று புரியவரும். ஆகையால், தமிழ்மணத்துக்கு ஓட்டு போடுங்க... மேலே சொன்ன சுட்டியை தொடர்ந்து வாசித்து வந்தால், தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாவது தெரியவரும். இங்கேயும் நான் தெரிவிக்கிறேன். ' என்ன பெரிய பொல்லா