சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பு - 2005 வருகிற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி, மாலை ஐந்து மணியளவில், கடற்கரையில், காந்தி சிலை அடிவாரத்தில், வலைப்பதிவாளர்கள் அனைவரும் சந்தித்து ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். இது கூட்டமோ மாநாடோ அல்ல. வெறும் சந்திப்பு மட்டுமே. இதற்கென்று நிகழ்ச்சி நிரல் ஏதும் இல்லை. இந்தக் கூட்டத்தை நெறிப்படுத்தி நடத்துபவர் என்று யாரும் கிடையாது. வரவேற்புரை, தலைமை உரை, நன்றி நவிலல் என்ற சம்பிரதாயங்கள் கிடையாது இந்தச் சந்திப்பிற்கு, சென்னை, மற்றும் சுற்றி இருக்கும் நகரங்களில் இருப்பவர்கள், தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். யார் யார் எல்லாம் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்? 1. சென்னையில் இருக்கும் வலைப்பதிவாளர்கள் 2. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் வலைப்பதிவாளர்களும், அண்டை மாநில வலைப்பதிவாளர்களும் 3. அயல்நாட்டில் இருந்து சென்னைக்கு விடுப்பில் வந்திருப்பவர்களும், வர இருப்பவர்களும் 4. வெளிநாட்டில் இருப்பவர்கள், தத்தம் முதலாளிகளுக்கு, " as i am suffering from fever... " என்று தொடங்கும் விடுப்புக் கட
இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு இணையத்தளத்துக்காக எழுதிய கட்டுரையை ( எந்தவிதத் திருத்தமும் இல்லாமல் அப்படியே) இங்கே மீள் பிரசுரம் செய்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் , சுஜாதா சார்... அன்புடன் பிரகாஷ் **************************** சிகரம் தொட்ட.... ஒரு எழுத்தாளன் பற்றிய ஒரு வாழ்க்கை சித்திரம் என்றால், அவர் இன்னாருக்கும் இன்னாருக்கும் மகனாக பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார், எழுதினார் என்ற ஒரு சம்பிரதாயத்தை ஒட்டித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? அவர் பிறந்த வருஷம், எழுதிய வருஷம், விருது பெற்ற தேதி என்ற மொண்ணை எண்களை முன்னிலைப்படுத்துவது, ஒரு தேவையற்ற செயல். மேலும், அவர் முதல் முதலாக பார்த்த ஏர்போர்ட் கிரவுண்ட் இஞ்சினியர் வேலை, பின்னர் யுபிஎஸ்சி பாஸ் பண்ணி பாரத் எலக்ட்ரானிக்ஸில் விஞ்ஞானியாக சேர்ந்து பெரிய பதவியில் ரிடையர் ஆனது, பல முக்கியமான மின்னணு சாதனங்களில் அவரது பங்கு, போன்ற தகவல்கள் அவரது படைப்புலகம் பற்றிய கட்டுரைக்கு எவ்வளவு தூரம் வலு சேர்க்கும் என்று தெரியவில்லை. ஒன்று வேணுமானால் சொல்லலாம். சம்பாதனைக்கு பங்கம் ஏதும் இல்லாத கவர்மெண்ட் வேலையால், அவருக்கு எழுதி
கடற்கரை மணலில் வட்டமாக உட்கார்ந்திருப்பது, சட்டசபையை நினைவு படுத்துகிறது என்று நக்கலடித்த நாராயண் , முக்கியமான வேலைகளையெல்லாம் தள்ளிப் போட்டு விட்டு, உற்சாகமாகக் கலந்து கொண்ட மாலன் , தமிழர் பாரம்பரிய உடையாம் எட்டுமுழ வேட்டியிலே வந்து, கூட்டத்தின் இறுதி வரை இருந்து, ஒருங்குறி, ஆடியோ ப்ளாகிங், விக்கிபீடியாவின் அவசியங்கள் பற்றி சுவாரசியமாக லெக்சர் கொடுத்த பத்ரி , காந்தி சிலை என்று நினைத்து உழைப்பாளர் சிலை அருகில் காத்திருந்து விட்டு, பின் லேட்டாக வந்து கலந்து கொண்ட தமிழ்மார்கெட்டிங் வஸ்தாது-கம்-ரஜினிரசிகர் மீனாக்ஸ் , குறித்த நேரத்த்தில் வந்து, சைக்கிள் கேப்பில் கமண்ட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருந்த நாலாவது கண் சந்திரன் , தமிழ்க் கவிதை உலகுக்கு லேட்டஸ்ட் வரவான, இன்னும் ப்ளஸ்டூ படிக்கிற பையன் தோற்றத்தில் இருக்கும் வா.மணிகண்டன் , வலைப்பதிவு, பின்னூட்டம் போன்ற ஆத்மசுத்தி தரும் காரியங்களைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு, விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தில், கண்டெண்ட் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சந்தோஷ் , வந்ததில் இருந்து சரியாக பதினாலு வார்த்தைகள் மட்டுமே பேசிய தமிழ் சசி , வலைப்பதிவு இல்லா
Comments