கி ழக்குப் பதிப்பகம் வயசுக்கு வந்து விட்டது என்பதற்கான நிரூபணம் தான், அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் நாலு மூலை என்ற ராகி.ரங்கராஜனின் கட்டுரைத் தொகுதி. வழக்கமான வாழ்க்கை வரலாற்று நூல்கள், சஞ்சிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுதி, வி.ஐ.பி எழுத்தாளர்களின் முழுமையான படைப்புத் தொகுப்புகள், சென்சேஷனல் விவகாரங்கள் போன்ற வழக்கமான நூல்களினூடே , அனேகமான, மக்கள் மறக்கத் துவங்கி இருக்கும், ரா.கி ரங்கராஜன் அவர்களின் நூலை முதல் பதிப்பாகக் கொண்டு வந்ததைத்தான், வயசுக்கு வருவது என்ற பிரயோகத்துடன் ஒப்புமைப் படுத்தினேன் என்பதை நண்பர்கள் புரிந்து கொண்டாலும் சரி, இல்லை என்றாலும் சரி. எனக்கு ஏகப்பட்ட ரங்கராஜன்கள் மீது ப்ரீதி உண்டு. அந்த ரங்கராஜப் பட்டியலில் இரண்டாவதாக இடம் பெற்றிருப்பவர் ரா.கி.ரங்கராஜன். ரா.கி.ரங்கராஜன், ஒரு பத்திரிக்கையாளராக இல்லாமல், மற்றவர்களைப் போல, உத்தியோகஸ்தராகவும் பகுதி நேர எழுத்தாளராகவும் இருந்திருந்தால், அவருடைய எழுத்தின் வீச்சு, பரவலாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்ற எண்ணம் அவ்வப்போது எனக்குத் தோன்றும், பதினைந்து வயது முதலே, பத்திரிக்கையில் பணியாற்றவேண்டும் என்று எண்ணம்
Comments
Thanks for sharing the information and congratulations for being selected as a juror. Could you please share the full list of nominations for 'Tamil blogs' category? I haven't seen (or missed?) any post or discussion in Tamil blogs regarding this.