that that man, that that work என்று சொல்லுவார்கள். அவரவர்களும் அவரவர் வேலையை ஒழுங்காகச் செய்தாலே, பெரும்பான்மையான சிக்கல்கள் தீரும். திரைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஒருத்தர், சமூக விஞ்ஞானி வேஷத்தை போட்டுக் கொண்டால் என்ன ஆகும்? அன்னியன் மாதிரியான ஒரு திரைப்படம் தான் நமக்குக் கிடைக்கும். ஷங்கர் , அடிப்படையில், எஸ்.ஏ.சந்திரசேகர் என்கிற, சட்டத்தைக் கரைத்துக் குடித்த மாதிரி பாவ்லா காட்டுகிற ஒரு mediocre இயக்குனரின் சிஷ்யபுள்ளை. அந்த காலத்தில் எஸ்.ஏ.சி , 'நான் சிகப்பு மனிதன்', 'சட்டம் ஒரு இருட்டறை', 'சாட்சி' என்று வரீசையாக, சட்டத்தை கொத்துக் கறி புரோட்டா போட்ட படங்களைத்தான், அவருடைய சீடர் கொஞ்சம் sophisticated ஆக எடுக்கிறார் என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியமில்லை. ஒரு படைப்பாளி தன்னுடைய கதைக் கருவாக இன்னதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்ல நமக்கு உரிமையில்லை. ஆனால், படம் பார்க்கிற சமூகத்தை ஒரு நோயாளிக் கூட்டமாக உருவகம் செய்து கொண்டு, அதற்கான மருந்தைத் வலுக்கட்டாயமாகப் புகட்டினால், அதைக் கேள்வி கேட்க நமக்கு உரிமை இருக்கிறது, அதிலும் diagnosis ...
Comments
Thanks for sharing the information and congratulations for being selected as a juror. Could you please share the full list of nominations for 'Tamil blogs' category? I haven't seen (or missed?) any post or discussion in Tamil blogs regarding this.