தாடியும் மீசையும் கிளம்பும்போது ஒரு பெங்காலி கடையில் திருட்டு ரெயில் படுக்க உதவும் என்று திருடிக் கொண்டு வந்த தடிமனான ஆங்கில புத்தகங்களையும் பார்த்த சக திருட்டு பயணிகள் கோவாலுவினை ஏதோ அறிவுஜீவியாக நினைத்தார்கள். அதற்கும் வந்தது ஆப்பு. சென்ட்ரலில் இறங்கி டிக்கெட் இல்லாமல் மாட்டியதால், எதிரே இருக்கின்ற ஜெயிலில் கொண்டு போய் காவலில் வைத்து விட்டார்கள். ஏதோ பேரணி, ஊர்வலம் நடத்தி வெள்ளிக்கிழமை உள்ளே தள்ளி திங்கள் கிழமை ஜாமீனில் வெளிவரக் கூடிய ஒரு அரசியல் தலைவர் கோவாலு இருந்த அதே செல்லில் இருந்தார். பெரியார் பற்றியும், சமஸ்கிருதம் பற்றியும், எம்.ஜி.ஆர் பற்றியும் பேசியதை பார்த்த அவர் கோவாலுவிற்கு மூலதனம் நூலை கொடுக்க, பொழுது போகாமல் அப்படியே படித்து முடித்த கோவாலு, கொஞ்ச நாள் கழித்து துரத்தியடிக்கப்படும் போது, புதிதாக வகுப்பு வாத பிரதிநிதித்துவ நிர்மூலம், இனப்பண்பாட்டு முடக்கு இயல் வாதம் என ஜல்லியடிக்க ஆரம்பித்திருந்தான். வெளியே வந்தவுடன் இதை போல உளறியதை பார்த்த் தகரம் கண்டுபிடித்த கம்யுனிஸ்டுகள், கோவாலுவினை அறிவுஜீவியாக கண்டறிந்தார்கள். ஏற்கனவே வாயில் நுழையாத மந்திரங்களை உளறும் கோவாலு, கம்யுன...
அண்ணா பல்கலைக்கழக விடுதியில் ரெய்ட் நடந்த போது, போர்னோகிரா·பி படங்களை, கணிணியில் பார்த்துக் கொண்டிருந்த நான்கு மாணவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டார்கள். அவர்கள் நால்வரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இது இன்று ஹிந்துவில் வந்திருக்கும் செய்தி . போர்னோகிரா·பி பார்ப்பது, படிப்பது போன்றவை, அண்ணா பல்கலைக்கழக விடுதியின் விதிமுறைகளுக்கு உட்படாததாக இருக்கலாம். ஆனால், அந்தத் தவறுக்கு சஸ்பெண்ட் செய்வது, அந்த மாணவர்களின் வாழ்க்கையில் எத்தனை மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் சரியாக உணரவில்லை. தமிழகத்தைப் பொறுத்த மட்டில், அண்ணா பல்கலைக்கழகம், ஒரு முதன்மையாக கல்வி கேந்திரம். தொழில்நுட்பக் கல்வியை எடுத்துப் படிக்க நினைக்கிற பெரும்பான்மையானோர் தேர்ந்தெடுப்பது கிண்டி செல்கிற பாதையைத்தான். அப்படிப்பட்ட ஒரு கல்விக்கூடத்திலே சேர, சிரமப்பட்டுப் படித்து,இரவு பகல் பாராது உழைத்து, நுழைவுத்தேர்விலே தேர்ச்சி பெற்று, வருங்காலத்தில் ஒரு பொறியாளராகலாம் என்று எண்ணத்துடன் இருக்கும் இருபதின் ஆரம்பத்தில் இருக்கும் இளைஞர்களை, ஆபாசப்படம் பார்த்த காரணத்துக்காக, தற்காலி...
1.எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த ஸ்னேஹா வை எனக்கு மட்டும் அடையாளம் தெரியாமல் போவது ஏன் ?
2. எனக்கு நேரம் கிடைக்கும் வார இறுதிகளில் எல்லாரும் கம்ம்னு இருக்க, நான் வேலையா சுற்றிக் கொண்டிருக்கும் நேரங்களில் , இணையம் பரபரப்பாக இருப்பது ஏன்?
3. எல்லாரும் சடுதியில் முடித்து விட்டுப் போக, எனக்கு முன்னால் நிற்கிறவன் மட்டும் தொடர்ந்து ஐந்து நிமிடம்
'உச்சா' போவது ஏன்?
4. நாளை மற்றுமொறு நாளே என்ற குட்டி புஸ்தகத்தை நாற்பது நாளாகப் படித்தும் இன்னும் முடிக்க
முடியாமல் இருப்பது ஏன்?
5. இணையத்தில் எங்கே முகமூடி தென்பட்டாலும், உடனடியாக ' நீங்க தானே அது? " என்று எனக்கு ஒரு மடல் வருவது ஏன்?
6.பிடித்த நடிகர் கவுண்டமணி செந்தில் என்று சொன்னால், எல்லாரும் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பது ஏன்?
7. என் கூட ஆரம்பித்தவர்கள் எல்லாம் 'புகைவண்டி' ஓட்டுவதை நிறுத்தி விட, நான் மட்டும் இன்னும் விடாமல் ஓட்டுவது ஏன்?
8. கமலஹாசன் இன்னும் டூயட்டு பாடுவதை நிறுத்தாதது ஏன்?
9 "நீங்கள் கேட்ட பாடலில்" எந்த குழந்தையைக் கேட்டாலும், பிடித்த நடிகர் விஜய் என்று சொல்வது ஏன்?
...
Comments