THANGLISH blogs..

கில்லி க்காக, பல தமிழ் ஆங்கில வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது, சில விஷயங்கள் புலப்பட்டன. அதாவது தமிழ் பேசத் தெரிந்த ( அனேகமாக எழுதவும் தெரிந்த ) பலர், தமிழை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற வினோதமான விஷயம் அதில் ஒன்று. அது. கட் பண்ணி, ஓப்பன் பண்ணி, ஆன் பண்ணி, ஆ·ப் பண்ணி என்கிற பண்ணித் தமிழ் ஒரு கொடுமை என்றால், 'ennoda poonaikutti seththu pOchu' என்கிற தங்க்லீஷ் மற்றொரு கொடுமை. ஒரு ஆத்திர அவசரத்துக்கு, முரசு அஞ்சலை எடுத்து எழுத சோம்பல் பட்டு, ஓரிரு வரிகள் தங்கிலீஷில் எழுதுகிறவன் தான் நான் என்றாலும், சில சமயம் பக்கம் , பக்கமாக தமிழை ஆங்கிலத்தில் படிக்கக் கிடைக்கும் போது, பேசாமல், விஜயகாந்த் கட்சியில் சேர்ந்து தேச சேவை செய்தால் என்ன என்கிற அளவுக்கு வெறுப்பாக ஆகிவிடுகிறது...

முறையான தமிழ் தட்டச்சுப் பயிற்சி இருந்தால் தான், கணிணியில் தமிழ் தட்டச்சு செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ? முரசு அஞ்சல் அல்லது ஈ-கலப்பை நிரலியை கணிணியில் நிறுவிய பின், notepad ஐ திறந்து, தமிழை தேர்வு செய்து, 'kamal' என்று ஆங்கிலத்தில் அடித்தால் 'கமல்' என்று தமிழில் வரும் அல்லது 'thamiz' என்று ஆங்கிலத்தில் தட்டச்சினால், 'தமிழ்' என்று திரையில் தோன்றும் என்கிற அளவுக்கு மிக எளிமையானது என்ற பிரச்சாரம் பரவலாக நிறைய பேரை சென்றடையவில்லையோ?

என்னமோ போங்க..

ஒரு முறை, நாக.இளங்கோவன், பொன்னியின் செல்வன் என்ற இணையக்குழுவிலே [கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை விவாதிக்கும் ஒரு இணையக்குழு] இப்படி தங்க்லீஷில் எழுதுவதை நையாண்டி செய்து, ஆங்கிலக் கடிதம் ஒன்றை தமிழில் எழுதினார். பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கும் மடல் அது. அதை இங்கே [ தமிழ் உலகம் இணையக்குழுவுக்கு நன்றி] மறுபிரசுரம் செய்கிறேன். தனியாக இருக்கும் போது வாசிக்கவும். இல்லையென்றால், அருகில் உள்ளவர்கள், கீழ்பாக்கத்தில் சேர்த்துவிடுவார்கள். அலுவலகத்தில் வாசித்தால், வேலை போய்விடும்.

--------------------------------------

"மை டியர் ·பிரண்ட்சு,

ஓப் யூ ஆர் ஆல் ·பைன்.

அயாம் ரைட்டிங் இன் தமிழ் பிகாசு ஐ டோண்ட் நோ இங்கிலீசு.அண்டு ஆல்சோ பிகாசு ஐ ஆம் நாட் செட் அப் வித் இங்கிலீசு ·பாண்ட்.அயாம் நாட் செட் அப் பிராப்பர்லி வித் தி இங்கிலீசு ·பாண்ட்,பேசிக்கலி பிகாசு ஆம் நாட் ஏபில் டு சூசெ ஒன் அவுட் ஆப் தி அவெய்லபிள் 1000 ;-).

சோ, பிளீசு எக்சுகியூசுமீ ·பார் மை பிளண்டர் அண்டு இக்னோரன்சு.

அய் பேசிக்கலி வாண்டட் டு அப்ரிசியேட் ஆல் ஆப் யூ ·பார்யுவர் எக்செலண்ட் காண்ட்ரிபூசன் டு தி குரோத் ஆப் தமிழ் இன் இண்டர்நெட்அண்டு டு தி சொசைட்டி.

அயாம் சுயூர் யு வில் டேக் தி கிரேட் பொன்னியின் செல்வன் அண்டு இட்சு இசுடரி டு தி கிரேட்டர் அய்ட்சு.

கன்கிராட்சு கய்சு! கீப் இட் அப்.

நெள லெட் மீ கம் டு தி பாயிண்ட்.

( யூ ஏவ் எவெரி ரைட் டு பி லவுசி டு மீ; அண்டு அன்சப்சுகிரைப் மீ;சோ கோ அகெட் இப் தி பிலோ ஆர் அகெய்ன்சுடு டு யுவர் நெட்டிக்குவெட்.பட் ஐ ஒன்லி வில் பீ சுமைலிங் ஆர் அட் டைம்சு லா·பிங் :-) )

1) வாட் ஆர் யூ டிரையிங் டு அச்சீவ் பை ரைட்டிங் இன் 100% இங்கிலீசு? தட் டூ ஆன்/அபெளட் எ ·பேமசு இசுடரி!

2) டோண்ட் யூ திங்க் தட் இட்சன் இன்சல்ட் டு கல்கி அண்டு தி கிரேட் நாவல்?

3) டோண்ட் யூ நோ முரசு அஞ்சல் (தேங்க்சு டு முத்து நெடுமாறன்) ?

4) டோண்ட் யூ நோ இ-கலப்பை (தேங்க்சு டு சிறீவாசு அண்டு முகுந்தராசு)?

(இ·ப் நாட் லெட் மீ எல்ப் யூ)

5) ஊ ஆர் யுவர் ஆடியன்சு? இங்கிலீசு? ·பிரெஞ்சு?

6) டோண்ட் டெல் மீ தட் யுவர் ஆ·பிசு கம்ப்யூட்டர் டசண்ட் அலவ் டமில் ·பாண்ட்வேர்.
லெட்டசு பீ ஆனசுடு; பிகாசு இட்டீசு ஆ·ப்டர் ஆல் எ பிரீவேர். ஈவென் இ·ப் சோ,
இட்டீசு பாசிபிள் டு கெட் யுவர் மேனேசர்சு பெர்மிசன்.

7) டோண்ட் டெல் மீ தட் யூ ஆர் ஆல்வேய்சு பிசி அண்டு இன் இரசு.பிகாசு, நாட் ஆல் ஆர்! அண்டு நாட் ஆல்வேய்சு. இட்டீசு தி ரியாலிட்டி.ஈவன் சோ, யூ கேன் சூசு ஆர் அட்டெம்ப்ட் டு ரைட் ஆ·ப் தமிழ் மெயில் இன்சுடெட் ஆ·ப் ரைட்டிங் ஒன் இங்கிலீசு மெயில்.

8) டோண்ட் டெல் மீ தட் யூ ஆர் ரைட்டிங் ·பார் எவெரி தமிழ் இன் மோரீசியசு ஊ டசண்ட் நோ ரீடிங் தமிழ்.

9) டோண்ட் யூ திங்க் வீ ஆர் ·பூலிங் அவர்செல்வுசு;அண்டு டி·பீட் தி வெரி பர்ப்பசு?

வெல். திங்க் கய்சு! இ·ப் யூ கம் அவுட் வித் எனி அன்செட் அண்டு இன்னொவேட்டிவ்
ரீசன்சு, பீப்பிள் வில் ஒன்லி லேர்ன் தெம்; பட் மே நாட் அப்பிரிசியேட் இட்.லெமீ டெல் யூ தட் வாட் யூ ஆர் டூயிங் ஈசு நாட் கோயிங் டு இசுபீக் ·பார் யு; பிகாசு வாட் யூ ஆர் டூயிங் ஈசு இன்கரெக்ட்.

சவுண்ட்சு ஆர்டு? அய் காண்ட் எல்ப் இட்.

** பட் ஓப் யு வில் அண்டர்சுடேண்டு அட்லீசுடு அவ் ஆரிபிள் டு ரீட் தி இங்கிலீசு இன் தமிழ்;

தி சேம் வித் ரீடிங் தி தமிழ் (தெட் டூ தி கோல்டன் இசுடரி மேட்டர்சு) இன் இங்கிலீசு டூ. **

வெல்; ட்ரை திங்க்! யூ வில் கெட் தெ வே அவுட்;தட்சு தி சுமால் பீசா·ப் அட்வைசு இன் மை இசுடோர்.

தேங்க்சு ·பார் தி ஆப்பர்ச்சூனிட்டி.

வித் பெசுடு ரிகார்ட்சு ஆல்வேய்சு
நாக.இளங்கோவன், தி இங்கிலீசுலெசு இன்சேன்.

பி.எசு:

எ) அயாம் சிசியிங் திசு டூ அதர் குரூப்சு ஆல்சோடு பிகம் லிட்டில் மோர் இன்சேன்.

பி) பிளீசு எல்ப் மீ ·பார்வடிங் திசு மெயில் டூ ஆல் குரூப்சு வேர் அய் டோண்ட் ஏவ் ஆக்சசு"

----------------------------------------------------

நன்றி : தமிழ் உலகம் இணையக்குழு, நாக.இளங்கோவன்.

Comments

SnackDragon said…
தேங்க்சு பார் த ஒன்டர்புல் மெசேசு. கீப் இட்டு அப்பு :-)
இதே விஷயங்குறித்து நானும் யோசித்ததுண்டு - ஆனால், தமிழை ஆங்கிலத்தில் எழுதுமளவாவது ஆர்வமுள்ளதே என்றுதான் பாசிடிவாக நினைக்கத்தோன்றியது. அதேசமயம், நீங்கள் சொன்னதுபோல ஒரு பத்திக்கு மேல் தமிழை ஆங்கிலத்தில் படிக்கக் கரடுமுரடாக இருப்பதுவும் உண்மையே.

முழுக்கத் தமிழில் எழுதலாம்: தேவை ஒரு சின்ன முயற்சி மட்டுமே ;-)
rv said…
:)))))

சூப்பரு (இது தமிழ் வார்த்தை தானே?)
Karthik Jayanth said…
ஹே டியுட்,

காட் தி எக்சலென்ட்டு மெசேசு. கன்கிராட்சு! கீப் இட் அப்.
Albert said…
நீங்க எழுதியிருப்பது உண்மைதான். சிலர் தன்னிடம் message வைத்திருந்தாலும் அப்படித்தான் எழுதுவார்கள். இதுபற்றி நானும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.

http://sarugu.blogspot.com/
2006/02/blog-post_12.html
Mookku Sundar said…
எனக்கும் தமிழை ஆங்கிலத்தில் எழுதினால் நிஜமாகவே கொலை வெறி வரும்.

என் நண்பர் ஒருவர் வெகு நாட்களுக்கு முன் இந்த லிங்க அனுப்பி இருந்தார். மிகவும் சிலாகித்து, ரெகமண்ட் செய்து இருந்தார்.

http://tatooines.blogspot.com/2005/09/en-per-padum-paadu.html

முதல் முறை பார்த்தபோது அது அந்த விளக்கெண்ணெய் ஸ்டைலி எழுதப்பட்டது தெரிந்தது. இன்றுவரை அதில் முதல் வரியைக்கூட தாண்டாமல், அதற்குப் பின்பு பலமுறை அவர் அதைப் பற்றி கேட்டபோது, மூ.கு.க.கு மாதிரி வழ்ந்திருக்கிறேன் என்றால் நம்புவீர்களா..??
lazygeek said…
prakash, naanum oruvan.
Premalatha said…
When Kalai was blogging everyone was begging her to write in tamil or in english. she categorically told that many of her friends cannot read/write tamil. it is true. many chennaites cannot read/write tamil. it is a shame but true.

this thanglishu is the reason I hate certain blogs. I just skip them. but, tatooines was wonderful. mooku sunder, you just missed it. that was a must read, and you missed it. :(
Premalatha said…
http://premalathakombai.blogspot.com/2006/03/thanglish-blogsicarus.html
Kanags said…
//எனக்கும் தமிழை ஆங்கிலத்தில் எழுதினால் நிஜமாகவே கொலை வெறி வரும்.
என் நண்பர் ஒருவர் வெகு நாட்களுக்கு முன் இந்த லிங்க அனுப்பி இருந்தார். மிகவும் சிலாகித்து, ரெகமண்ட் செய்து இருந்தார்.//
ippadip pannith thamilil ezuthuvathai vita ithu evvaLavo mEl. இப்படிப் "பண்ணி"த் தமிழில் எழுதுவதை விட இது எவ்வளவோ மேல்.
Badri Seshadri said…
Thanglish is not a major problem, if people are willing to follow a fixed notation.

Thus, அ should always be 'a'. Random phonetic usage should be avoided.

'அம்மா' should always be 'ammaa' or 'ammA'. However thanglish bloggers do not do this. They just type in their own - closest phonetical format - and hope that their readers will make sense of the same.

Take for example Premalatha in her blog where she points to the current posting under discussion. She says: "Naan illappa. vaiyanumnu ninachchaa icarussa pudinga. nammala vittudunga."

If I use Murasu converter on this string, I get "ணான் இல்லப்ப. வையனும்னு னினச்சா இcஅருச்ச புடிங. னம்மல விட்டுடுங."

The correct Murasu version of transliteration would be "n-An illappA. vaiyaNumnu n-inaissA ikAraSa pudingka. n-ammaLa viddudungka." But this is not the only version (as it reads poorly). This can be fine tuned.

Once every thanglisher writes in a standard that we can evolve from a base Murasu transliteration, it is rather easy to write thanglish converters on the fly (for Firefox/Mozilla as well as IE), which can make life easier for those capable of reading in Tamil font.

For those who cannot read Tamil at all, one can always build an audio converter. For this job, phonemes need to be recorded. (Now, there is a wonderful discussion topic - should the phonemes be brahmin accented or not - I leave this to potteakadai).
Pot"tea" kadai said…
ஜி டே பத்ரி மைட்,
காட் அ ப்ராப்லெம் வித் மி? கமான் மைட்...லெட்ஸ் ஸ்பீக் அவுட்...டோனெவெர் ட்ரை டு ஷிட் அப் வித் மி?
டோன்ட் ஃபக்கின் ஸ்டேர் அட் மி?:-)
டு யு நோ வாட் ஐ மீன்?
ஐ கிட் யு நாட், மைட்...:-)

மன்ச்சிடு நைனா...
Premalatha said…
ennaappa Badri,

thanglish makkalee somberi. athanaalathaan thangalish. ithukku oru ruls-aa? thamilkaarangala thiruththa mudiyaathu.

btw, thamil, tamil, tamiz, thamizh, thamizh.. oru mudivukku vanthathum enakku solliyanuppunga. naan kandippa thamil-than use pannuveen.

btw, mythreyi blog padicheenglaa? athu "oru" englishu. mukkiyama comment section padinga. inthakkaala makkal-kitta time ethu? vanthamaa adichchamaannu poikkinee irukka viduveengala payamuruththuringale.
Premalatha said…
innonnu, "Naan illappa"-thaan sari. enna, Englishu-kku oru grammer irukku. athula, sentence-ukku mutha letter capital-a varanu. so, Naan illappa thaan coreectu.

(sorry Icarus. I was having fun).

btw, mooku sundar and whosover who haven't read tatooines, you were the one who are at loss. not her. it was a "once-in-life" chance kind of posting. you lost your chance.
Premalatha said…
n yen style-a? :D lol.. thanx, watevr dat referred to! ன்னு மைத்ரேயி எழுதினத படிக்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கிட்டபோது நமக்கு நிசமாவெ வயசாயிருச்சு மவளே அடக்கிவாசி இனிமேன்னு நினைச்சுக்கிட்டென். ello, huv r u, tat waz gudனு emailவரும்போது தினம் இப்படி வயசானத ஞாபகப்படுத்துறாங்களே நம்ம தோழிகள். சின்னவயசு ஆட்கள்கிட்டயிருந்து இனிமே ஒதுங்கிப் பிழைக்கனும்னு நினைச்சேன்.

Badri, danksba, என்னவிட வயசான கட்டையெல்லாம் இருக்கு இங்க. (நீர்தான்). "n-An illappA. vaiyaNumnu n-inaissA ikAraSa pudingka. n-ammaLa viddudungka" அல்லது "waan illappaa vaiyanumnaa aikaasarSa pudingka" (நான் உபயோகப்படுத்துற http://www.jaffnalibrary.com/tools/Unicode.htmபடி).
இது படிக்கவும் பயங்கரமா நேரம் எடுக்குதே. இதுக்கு naan eluthiyirkkirathee theevalaam.

(Badri, I was just joking. hope you do not mind it. Btw, thanks for dropping my at my blog. Please do come back when you have time and interest. I do not write in Tanglish, (only little). :-)
Kaps said…
sorry for the comment in English:

As Premalatha mentioned in her comment, lot of people from TN take pride in the fact that they don't know how to read or write in Tamil.

Although there is a certain segment which doesn't know (probably bcoz of living outside TN / India), majority have grown up in TN and have refused to learn Tamil (one of the reasons could be that they could more marks in other Second languages during the board exam).

writing tamil posts in english (that too when a majority of the audience is tamil speaking) is unwarranted and not the right way ahead. These people might take refuge under the fact that others don't know how to read Tamil.

IMHO the real reason for such a thing is the fact that writing tamil in english is being considered as cool and trendy. i hope the trend gets reversed.
Premalatha said…
Kaps, english also got shortened, "huv r u" kind of English.

I live in a world where people still don't write "hi", but "Dear Premalatha". They hate me when I miss to write in capitals in the begining of the sentences. I am just being lazy to press the shift key (did not learn to type, which is another major factor).

(I have updated in my blog. Just having some fun. :-) )
lazygeek said…
premalatha, now that you said, "many chennaites cannot read/write tamil. it is a shame but true", here's a question for you ?

I hope, instead of jumping with superflous satirical comment like what you did with badri, you would answer this in a way it makes sense to all of us .

simple. many chennaites ? how may are you talking. stats please.

Kaps, you said "As Premalatha mentioned in her comment, lot of people from TN take pride in the fact that they don't know how to read or write in Tamil. "

where did premalatha mentioned that lot of people from TAMILNADU take pride about this.

My chota-saa[this is HINGLISH] brain can't make any sense out of the comedy that's happening here.
Premalatha said…
Lazy_geek, where did premalatha mentioned that lot of people from TAMILNADU take pride about this.

Now.

A lot of people from TAMILNADU take pride about this.

Tallied? good.
Premalatha said…
what you did with badri

what was that? Badri old-nu sonatha? avarukke kopam varla.
kjey said…
well,... I appreciate ur feelings about THANGLISH.
I have ekalappai but it does't useful to write comments in tamil e.g: Tamil =தமிழ்
c above. how can i correct above mistake, help me plzzzz..(any software same as ekalappai????)
i am ashamed of typing in, what you call thanglish.......but i do not know to type in tamil
l think there are many like me
why dont you help us?
Premalatha said…
Hi Sivagnanamji and kjey,

try the following link.

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
Mookku Sundar said…
//எனக்கும் தமிழை ஆங்கிலத்தில் எழுதினால் நிஜமாகவே கொலை வெறி வரும்.
ன் நண்பர் ஒருவர் வெகு நாட்களுக்கு முன் இந்த லிங்க அனுப்பி இருந்தார். மிகவும் சிலாகித்து, ரெகமண்ட் செய்து இருந்தார்.//
ippadip pannith thamilil ezuthuvathai vita ithu evvaLavo mEl. இப்படிப் "பண்ணி"த் தமிழில் எழுதுவதை விட இது எவ்வளவோ மேல்.//

அன்பர் ஸ்ரீதரன்,

இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதை "எனக்குப் " பிடிக்கவில்லை என்றால், நான் ஏன் சுத்தத்தமிழில் எழுதுவதைல்லை என்று ஒரு கேள்வி..??

தமிழை, எழுதவும் படிக்கவும், தமிழ் எழுத்துரு பயன்படுத்தி எழுத முனைப்புக் காட்டாத ஆட்களிடம் சுத்தத் தமிழில் எழுதி என்ன பிரயோசனம்..??

அவர்கள் எழுதும் விளக்கெண்ணெய் மொழிக்கு, என் பண்ணித் தமிழ் எவ்வளவோ மேல்...!! அட்லீஸ்ட் படிக்கவாவது முடிகிறது. சுத்தத்தமிழ் வேண்டுபவர்கள் இராம.கி ஐயா எழுதவதை படித்துப் பாருங்கள். தமிழறிவாவது கொஞ்சம் பலப்படும்.
மறுமொழி அளித்த நண்பர்களுக்கும், பின் தொடர்ந்து தனிப்பதிவாக எழுதிய நண்பர்களுக்கும், தனி மடலில், sarcastic ஆக ஒன்லைனர் விட்ட நண்பர்க்கும். நன்றி..

சில விளக்கங்களை இங்கே தருவது சரியாக இருக்கும்...

1. என்னுடைய பதிவின் தொனி, கொஞ்சம் authoritative போல தோன்றினால், நான் சொல்ல வந்ததை சரியாகச் சொல்ல வில்லை என்று அர்த்தம்.

2. தனக்கு தனிப்பட்ட முறையில் தோன்றுவதை பிறர் மீது ஏற்றி, அவர்களுடைய அனுபவங்களும் என்னுடையதும் ஒரே வகையானது தான் என்று generic ஆக முடிவு கட்டும் பழக்கம் சிலரிடம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்தச் சிலரில் நானும் ஒருவன்.
நான் மிகவும் நொந்து போனது, ஓரிரு இடுகைகள் என்று இல்லாமல், பதிவு முழுவதும், தமிழை ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு ஒரே வலைப்பதிவைப் படித்ததும் தான்.

3. இன்ன மொழியில் எழுத வேண்டும் என்று சொல்வதற்கோ, இன்ன மாதிரி எழுத வேண்டும் என்று ஆலோசனை சொல்வதற்கோ நான் ஆளில்லை. நானே, பதிவு முழுக்க ஆங்கில வார்த்தைகளை இறைத்து, நேரமிருந்தால், பொருத்தமான தமிழ் வார்த்தைகளை நினைவில் இருந்து துழாவி எடுத்து எழுதி, அல்லது அவசரத்தில் அப்படியே இட்டு, கொள்ளிடத்தில் இருந்து கொட்டிவாக்கம் வரை பலரிடம் இருந்து வாங்கிக் கட்டிக் கொள்கிறவன் தான். ஒருக்கால், தமிழில் தட்டச்சு செய்வது மிக எளிமையானது என்று தெரியாமல் இருக்கிறார்களோ என்ற ஆதங்கம் தான், இந்த இடுகை..

4. மறுமொழியில் சன்னாசி சொன்னது போலவும், பின் தொடர் பதிவில் உமா சொன்னது போலவும், இப்படியாவது தமிழ் புழக்கத்தில் இருக்கிறது என்பதில் எனக்கும் உடன்பாடுதான்.

5. இந்த இடுகை, யாரையும் வெறுப்பேற்றுவதற்காகவோ, அப்படி எழுதுபவர்களைக் கிண்டல் செய்வதற்காகவோ எழுதப்பட்ட பதிவு அல்ல.

6. வேலி, வேட்டி, ஓணான் கதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. :-)
nayanan said…
நண்பரே,
விசய்காந்த் கட்சியில் சேர்ந்தால், என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் :)

உங்களுக்கு உதவியாக இருப்பேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
Kanags said…
//சுத்தத்தமிழ் வேண்டுபவர்கள் இராம.கி ஐயா எழுதவதை படித்துப் பாருங்கள்//
மூக்கு சுந்தர், தமிழிலும் சுத்தத் தமிழ் அசுத்தத் தமிழ் என்றிருக்கிறதா? அசுத்தத் தமிழ் என்று நான் கருதுவது தூஷணத் தமிழை மட்டுமே:)
Mookku Sundar said…
ஸ்ரீதரன்,

இப்போது இது என்ன புது வரையறை.

பண்ணித் தமிழ் என்று ஆரம்பித்தது நானா..??

போகிற போக்கில் தினம் தினம் தங்க்லீஷ், பண்ணித்தமிழ், தூஷணத்தமிழ் என்று புதுசு புதுசாக கண்டுபிடிப்பீர்கள் போல. எழுதிவிட்டு என்னிடமே கேள்வி வேறு.

என்னய்யா , வெளையாடறீங்களா..?? :-)
Dubukku said…
Have linked this in Desipundit
http://www.desipundit.com/2006/03/26/tang%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b7%e0%af%8d/
Blogeswari said…
inime ellarum tamizh-laye ezhuvoam!!
[he he he]
ஆஹா, நம்ம மாதிரி இன்னும் நாலு பேர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் "கொலைவெறி" தணிந்துவிட்டது சாமி. காலங்கார்த்தால
ஒரு அனானிமஸ், அறிவாளி படபாடல் என்று மேற்கோள் காட்டி சிலவரிகள் கமெண்ட் அனுப்பியிருந்தார். எழுத்துக்கூட்டி படித்தும்
விளங்காமல், அதை பொங்கு தமிழில் காப்பி, பேஸ்ட் செய்து, romanised மொழி பெயர்த்தாலும் ஹ¥ஹ¥ம்! அடைந்த துக்கத்தை சமாளித்துக்
கொண்டு, ஐயா/அம்மா நீங்க இங்கிலீபிசுலேயே கமெண்ட் அடிங்க, இப்படி வெறுப்பேத்தாதீங்க என்று கெஞ்சிக் கேட்கலாம் என்னும்
பொழுது... இந்த பதிவு.
ஒரு வழியாக நானும் தமிழ் எழுத ஆரம்பித்து விட்டேன். ஒவ்வொரு தரமும் இ-கலப்பையைத் திறந்து விட்டு எழுதும்போது ஞாபகமாக மூடி இருக்கிறேன். அதுதான் என்ன செய்தாலும் தடுமாற்றம். எழுத முடியவில்லை.
supersubra said…
இதில் தவறு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. என் சகோதரியின் மகன் பிறந்தது முதலே கர்நாடகாவில் வளர்ந்து பின் அமெரிக்காவில் இருக்கும் அவன் எனக்கு மின்கடிதம் அனுப்பும் பொழுதும் சாட் செய்யும் பொழுதும் முழுக்க முழுக்க தங்லிஷ் தான் உபயோகிப்பான். தமிழ் எழுத்து தெரியாததால். ஆனால் நான் எழுதும் ஆங்கிலம் கலந்த தமிழை விட அவனுடைய தங்லிஷில் ஆங்கில வார்த்தை மிக மிக குறைவு. தொலைபேசியில் பேசும்பொழுது சென்னை இளைஞர்கள் போல ஆங்கிலம் உபயோகிப்பதில்லை முழுக்க முழுக்க தமிழ்தான். தமிழ் எழுத்து என்பது ஒரு வரி வடிவம்தான்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வந்த பிறகு பிரதமர் நேரு ஒருமுறை இந்திய மொழி எழுத்துக்கள் எல்லாவற்றுக்கும் பதிலாக ஆங்கில எழுத்துக்களையே சற்று விரிவு படுத்தி உபயோகிக்கலாம் (இன்றைய மலாய் போல்) என்று ஒரு கருத்து வெளியிட்டார். அது அமல் படுத்தப்பட்டிருந்தால் இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திற்கு சென்றாலும் மொழி தெரியாததால் கைகாட்டி பேருந்து முகவரி போன்றவற்றை படிப்பதில் சிரமம் இருக்காது. மேலும் இன்று எத்தனையோ இளைஞர்கள் பல மொழி பேசத்தெரிந்தும் வரிவடிவம் தெரியாததால் அந்த மொழி நூல்களை படிக்க இயலாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. அரசியல் காரணங்களுக்காக் அந்த முடிவு எடுக்கப்படாமலே போய்விட்டது.

மேலும் இன்றைய தமிழ் வடிவம் ஒன்றும் சங்ககாலத்திலிருந்தே பயன்பட்ட வடிவம் அல்ல. வட்டெழுத்திலிருந்து வெவ்வேறு மாற்றம் அடைந்து இன்றைய நிலையில் இருக்கிறது. அதனால் வரிவடிவத்துக்கும் அதிக புனிதத்தன்மை அளித்து தமிழின் வளர்ச்சியை குறைக்க வேண்டாம் என்பது என் எண்ணம்.

தமிழ் நாவல்கள் தங்லீஷ் வடிவத்தில் வெளியிடப்பட்டால் படிக்கக் கூட தமிழ் வரிவடிவம் தெரியாத இளைஞர்கள் முன்வருவார்கள் என்பது என் எண்ணம்.
முதன்முறையாக உங்க வலைக்கு பின்னூட்ட வருகிறேன்!

நயனத்தின் மடல் படித்து விலா நோகச் சிரித்துக் கொண்டிருக்கிறேன்! :)
bharat said…
ப்ரில்லியந்ட் போச்ட்!

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்