காணாமல் போன பதிவும், அதன் பின்னூட்டங்களும்

சென்றவாரம் என் வலைக்குறிப்பில் எழுதிய " என் முதல் ஹைக்கூ கவிதை" என்ற பதிவும், அதன் பின்னூட்டங்களும் திடீரென்று மாயமாய் மறைந்து விட்டது. ஆகையால் கணிணியில் சேமித்து வைத்திருந்த அந்தப் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் ஒரே பதிவாக இங்கே இடுகிறேன். அசௌகர்யத்துக்கு நண்பர்கள் மன்னிக்கவும்.

அன்புடன்
பிரகாஷ்

Wednesday, June 22, 2005

என் முதல் ஹைக்கூ கவிதை...

கசட தபற
யரல வழள
ஞஙண நமன

இது எப்படி இருக்கு?

posted by icarus @ 6/22/2005 03:40:00 PM

41 Comments:

At 4:45 PM, Thangamani said...
நல்ல பதிவு பிரகாஷ் :-) .நன்றி

At 4:47 PM, ?????????(Mathy) said...
Hi, prakash, could you please drop me a line at mathygrps@yahoo.com? urgent....

At 4:50 PM, -/???????. said...
நல்ல பகிடி:-). தலைப்பும் நன்று.

At 5:17 PM ??? (Pari) said...
:-) :-) :-)

At 6:07 PM, Mookku Sundar said...
பிரகாசரே, நாயமா இது? இதையெல்லாம் ஒரு பதிவுன்னு போட்டு டென்ஷன் படுத்தற உம்மை என்ன செஞ்சால் தகும்?

At 6.18 PM, Arun Vaidyanathan said...
excellent post. Kudos prakash

At 7:45 PM, அல்வாசிட்டி சம்மி said...
பிரகாஷ், கலக்கல் பதிவு

At 12:54 PM, ஜெ.ராம்கி said...
பிரகாஷ்ஜி, இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலையா?

At 12:57 PM, icarus said...
பின்னூட்டம் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

At 01:57 PM, ROSAVASANTH said...
இகாரஸ் பாயைப் பிறாண்டத் துவங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். இந்தப் பதிவுவை ஏன் எல்லொரும் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள் என்று புரியவில்லை. காத்திரமான நகைச்சுவையும் இல்லாமல், எந்த அர்த்தமும் இல்லாமல், உயிர்மெய் எழுத்துக்களை matrix வடிவத்திலே எடுத்துப் போட்டால், அதிலே அருணுக்கும், ரவிஸ்ரீனிவாஸ¤க்கு சிரிப்பு வருகிறது என்பதைக் கூட ஒத்துக்கொள்ள முடியும். ஆனால், டிசேவும், பரியும் எதற்கான நகைக்குறிகளை இட்டு ஆதரவு தருகிறார்கள் என்று புரியவில்லை. ( உடனே ரவிஸ்ரீனிவாஸ், எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் இருந்து மேற்கோள் காட்டி நீளமாக விவாதம் செய்வார் என்று தெரியும். இருந்தாலும், வெறும் புண்ணாக்கு விவாதத்தில் எல்லாம் எனக்கு கலந்து கொள்ள விருப்பமில்லை. நேரமுமில்லை. இனி அடுத்த இருவாரங்கள் இணையத்துக்கு வரமாட்டேன். நன்றி.

At 01:58 PM, karthikramas said...
//நல்ல பகிடி:-) //

பெயரிலி, எனக்குப் புரியவில்லை. இதிலே என்ன பகிடி இருக்கிறது? சொல்ல விருப்பமெண்டால் சொல்லுங்கோ, இல்லாவிட்டால் விடுங்கோ.

At 2:45 PM, karthikramas said...
//இந்தப் பதிவுவை ஏன் எல்லொரும் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்//

ரோசா, எனக்கும் அதே கருத்துத்தான். will write in detail later

At 2:55 PM, ROSAVASANTH, at
கார்த்திக், நான் சொல்ல வருவதைத் தெளிவாக புரிந்து கொண்டதற்கு நன்றி. இனி அடுத்த இருவாரங்கள் இணையத்துக்கு வரமாட்டேன். நன்றி.

At 2:57 PM, -/???????. said...
//பெயரிலி, எனக்குப் புரியவில்லை. இதிலே என்ன பகிடி இருக்கிறது? சொல்ல விருப்பமெண்டால் சொல்லுங்கோ, இல்லாவிட்டால் விடுங்கோ.//

சொல்லிப் புரியாது காமாஸ்செர்ரீத்தம்பி. தெனாலி சோமகாசன் பிறிதொரு படத்திலே சொன்னாற்போல, இதையெல்லாம் ஆராயக்கூடாது, அனுபவிக்கணும்.

At 4:53 PM, Narain said...
தலீவா... இது நியாயமா? இப்பிடிப் போட்டு கவுத்திட்டீங்களே?

At 4:57 PM, enRenRum-anbudan.BALA said...
////இந்தப் பதிவுவை ஏன் எல்லொரும் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்//

நெத்தியடியாய் அடித்திருக்கிறீர்கள் ரோசாவசந்த். ஏன் இந்த வாரம் போட்டியில் கலந்து கொள்ளவில்லை? உங்களுக்காகக் காத்திருக்கிறேன். இன்னும் இரண்டு பாடல்கள் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது. இந்தப் பதிவைப் பார்க்கவும்
http://balaji_ammu.blogspot.com/2005_05_01_balaji_ammu_archive.html

என்றென்றும் அன்புடன்
பாலா

At 5:30 PM, ROSAVASANTH said...
//ஏன் இந்த வாரம் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. //
அழைப்புக்கு நன்றி பாலாஜி. வேலை பெண்டு நிமிர்கிறது. தற்போது நேரமில்லை. இனி அடுத்த இருவாரங்கள் இணையத்துக்கு வரமாட்டேன். நன்றி.

At 6:45 PM,Dondu said...
சமீபத்தில், அதாவது 1964 வருஷத்தில் எனக்கு ஒரு ஆங்கிலேயர் மேனேஜராக இருந்தார். நான் அப்போதுதான், கிண்டியில் பொறியியல் படித்து விட்டு வேலைக்குச் சேர்ந்திருந்தேன். வேலைக்குச் சேர்ந்த உடனேயே, அவர் என்னைப் பார்த்து " are you a brahmin? " என்று கேட்டார். நான் ஆமாம் என்று சொன்னதும், சந்தோஷப் பட்டார். ஏன் பட்டார் என்று எனக்குப் புரியவில்லை. அது போலவே இந்தப் பதிவும் எனக்குப் புரியவில்லை.

அன்புடன்
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
( எலிக்குட்டியை ப்ளாக்கரை ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்.)

At 6:55 PM, ROSAVASANTH said...
டோண்டு மாமா இதிலே பார்ப்பனீயத்தை இழுத்து விடுவார் என்பதை ஊகித்தேன். ஆனால் விரிவாக எழுத நேரமில்லை.

At 7:10 PM, icarus said...
//பார்ப்பனீயத்தை இழுத்து விடுவார் என்பதை ஊகித்தேன்//

ரோசா, டோண்டு சார் இதனை யதார்த்தமாகக் கூடச் சொல்லி இருக்கலாம். நல்ல அருமையான பதிவு, இந்த திசையில் திரும்பியது வேதனையாக இருக்கிறது. பார்ப்பனீயத்தை எதிர்க்கிறவன் என்கிற என் சொந்தக் கருத்து ஒரு பக்கம் இருந்தாலும், தேவையில்லாத connottations, நாம் விரும்பாத ஒரு திசைக்கு நம்மைத் தள்ளிவிடும் என்பதை, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

At 7:35 PM, Dondu said...
//டோண்டு மாமா இதிலே பார்ப்பனீயத்தை இழுத்து விடுவார் என்பதை ஊகித்தேன்//
ரோசா மருமகனே, நான் எங்கே பார்ப்பனீயத்தை இழுத்தேன். என் மேலாளர் தான் அப்படிக் கேட்டார். அதை இங்கே சொன்னேன். தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள். நடந்ததைச் சொல்வது தப்பா? எனக்குப் புரியவில்லை. உங்களுக்குச் சொந்த ஊர் நங்கநல்லூராமே? சென்னைக்கு வந்தால், அவசியம் சந்திக்கவும்.

அன்புடன்
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
( எலிக்குட்டியை ப்ளாக்கரை ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்.)

At 8:23 PM, ROSAVASANTH said...
//சென்னைக்கு வந்தால், அவசியம் சந்திக்கவும்.//
அழைப்புக்கு நன்றி டோண்டு சார். முயற்சி செய்கிறேன்.

At 9:05 PM, ROSAVASANTH said...
இகாரஸின் இந்தப் பின்னூட்டம் எனக்குப் புரியவில்லை. டோண்டுவை அவருடைய முதலாளி, நீ பிராமணனா என்று கேட்டது வேறு பிரச்சனை. அவர் சொன்னதிலும், தவறில்லை. ஆனால், அந்தச் சம்பவத்தை, இதற்கு சற்றும் பொருத்தமில்லாத இடத்தில், வந்து சொல்வதைத்தான் நான் ஆட்சேபிக்கிறேன். நீ பாப்பானா என்று அவர் முதலாளி கேட்டு சந்தோஷப்பட்டாராம். அதை ஏன் இங்கே வந்து சொல்கிறார்? பார்ப்பனரல்லாதவர்கள், பொறியியல் கல்லூரிகளில் படிக்க முடிந்ததா அந்தக் காலத்தில்? படித்தாலும், ஆங்கில்யே மேலாளரைக் கொண்ட கும்பணியில் ( நன்றி இராம.கி ஐய்யா) வேலைதான் கிடைத்திருக்குமா? அப்படி பார்ப்பனரல்லாதவர்களை எல்லாம் தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளி விடும் உத்தி தான் இது என்று சந்தேகப்படுகிறேன். டோண்டுவின் பின்னூட்டத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறேன். இந்த எதேச்சாதிகார மனப்பான்மையும் பார்ப்பனீயத்தின் ஒரு குறியீடே என்று சிலர் , முக்கியமாக ரவியும், பெயரிலியும் நினைக்கலாம். அப்படி நினைத்தால் நாளை வந்து பதில் சொல்கிறேன். இப்போது நேரமில்லை.

At 10:35 PM, Anonymous said...
dondu, nehmen Sie es einfach :-)

At 10:45 PM, Dondu said...
Anonymous, danke.aller Unsinn. ich kann nicht dieses leicht nehmen

அன்புடன்
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
( எலிக்குட்டியை ப்ளாக்கரை ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்.)

At 10:55 PM, anonymous said...
this post has been removed by the administrator

At 10:57 PM, Dondu said...
இகாரஸ் பிரகாஷ் அவர்களே.. தயவு செய்து, அனானிமஸாக பின்னூட்டம் தருகிற வசதியை நீக்கி விடுங்கள். இதைப் பற்றி நான் என் பதிவில் எழுதியிருந்தேனே, பார்த்தீர்களா?

டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
( எலிக்குட்டியை ப்ளாக்கரை ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்.)

At 11:01 PM, மாயவரத்தான் said...
this post has been removed by the author

At 11:23 PM, மாயவரத்தான் said...
this post has been removed by the author

At 11:27 PM, Badri said...
பிரகாஷ் : இந்த விவாதம் போகும் திசை சரியில்லை

At 11:34 PM, PKS said...
Badri, I fully agree with you. Off track, from one of your earlier posts, I am given to understand that you studied at cornell from 1991 - 96, . Do you know a professor by name Mannarswamy who taught material science during that period ? I have sent a personal mail to you in this regard.

Prakash, I sincerely apologise for using this space for exchanging personal notes.

Thanks.

At 12:45 AM, சுடலைமாடன் said...
பேசாப் பொருளைப் பேசத் துணிந்தவர்களுக்கு எல்லாம் அப்படித் தான் தோன்றும். பார்ப்பனீயத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த உடனே, இந்த விவாதம் போகும் திசை சரியல்ல என்று பத்ரி சொன்னதையாவது ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளலாம். ஆனால், அதை, நாயர்தாசர் அப்படியே ஆமோதிப்பதைப் பார்த்தீர்களா? இதற்கு மேல் ஏதாவது சொன்னால், மானநஷ்ட வழக்கு என்று திசை திரும்பிவுடும். அதனால், ஒதுங்கிக் கொள்ளுகிறேன்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

At 01:10 AM,அல்வாசிடி விஜய் said...
என்னய்யா நடக்குது இங்கே?

At 02:00 AM,Kuzhali said...
விஜய், எனக்கும் அதே கேள்விதான். பார்ப்பனீயம் என்று ஆரம்பித்த உடனே, பா.ம.க, ராம்தாஸ் என்று விவாதம் திசை திரும்பும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். நடக்கிறதாகத் தெரியவில்லை. மாயவரத்தானின் பின்னூட்டம் ஏன் அழிக்கப் பட்டது என்று தெரிந்து கொள்ள ஆவல்.

At 07:35 AM, icarus said...
பின்னூட்டத்துக்கு நன்றி, குழலி. மாயவரத்தானின் பின்னூட்டத்தை நான் நீக்கவில்லை. ரஜினிகாந்தைப் பற்றியும்., பா.ம.க பற்றியும் இருக்கும் ரெடிமேடு பின்னூட்டம் ஒன்றை , எதற்காவது உபயோகப்படும் என்று இங்கே போட்டு வைத்தாராம். ஆனால், பொருத்தமாக இல்லை என்று தோன்றியதும் அவரே அழித்து விட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

At 08:43 AM, Ramachandranusha said...
என்ன நடக்குது இங்கே? ஒண்ணுமே புரியலை...பிரகாஷ், விகடன்ல நம்ம மீட்டிங் பத்தி, சுஜாதா எழுதினதைப் படிச்சீங்களா? அதைப் பத்தி நீங்க ஒண்ணுமே சொல்லலியே?

At 11:03 AM, ?????? ?????? said...
இது என்ன விளையாட்டு பிரகாஷ்? உயிர்மெய் எழுத்துக்களை வரிசையாக மடித்துப் போட்டு விட்டு, அதை ஹைக்கூ என்கிறீர்களே? எதற்கும் ஒரு அளவே இல்லையா?

At 12:55 AM, icarus said...
//இது என்ன விளையாட்டு பிரகாஷ்? உயிர்மெய் எழுத்துக்களை வரிசையாக மடித்துப் போட்டு விட்டு, அதை ஹைக்கூ என்கிறீர்களே? எதற்கும் ஒரு அளவே இல்லையா?//

அன்பின் சுரேஷ் கண்ணன், சும்மா விளையாட்டுக்காகச் செய்தது, இப்போது வினையாகி விட்டது.

At 11:57 AM, ??????? said...
பிரகாஸ் அவர்களுக்கு, எதற்காக இந்தப் பதிவு என்று புரியவில்லை. உங்களுக்கு மறந்திருக்குமானால், " ஹைக்கூ... ஒரு அறிமுகம்" என்ற சுஜாதா எழுதிய நூலைப் படிக்க சிபாரிசு செய்கிறேன். பார்ப்பனீயம் என்று திசை மாறியது, புலிகள் பக்கம் திரும்பாமல் இருந்தது உங்களுக்கு நல்ல நேரம் என்பதைக் காட்டுகிறது.

At 12:55 AM, icarus said...
அன்பின் ஈழநாதன், பின்னூட்டத்துக்கு நன்றி. ஹைக்கூ ஒரு அறிமுகம் நூலைப் படித்திருக்கிறேன். எனினும், சிபாரிசுக்கு நன்றி.

At 09:18 PM, jack said...
penis enlargement pills.

Comments

i did not post any comment suggesting that this post is interesting or good.nor could i
see my name being displayed in
any of the comments.
ravi srinivas
என் பெயரில் இடப்படும் பின்னுட்டங்கள் - ஒரு அறிவிப்பு

இகாரஸ் பிரகாஷின் வலைப்பதிவில் நான் பின்னூட்டமிட்டாத போது யாரோ என் பெயரில் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். என் பெயர் நான் பயன்படுத்தும் உலாவியில் தெரியவில்லை.

ஆனால் நான் பின்னூட்டமிட்டதாக கருதி அங்கு ஒருவர் ஒரு முட்டாள்த்தனமான அபிப்பிராயத்தை உதிர்த்திருக்கிறார்.தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க இனிமேல் நான் இடும் பின்னூட்டங்கள் என் வலைப்பதிவிலும் இடம் பெறும். இதன் மூலம் பின்னூட்டம் இட்டது உண்மையிலேயே நான் தானா என்பதை சக வலைப்பதிவாளர்களும், வாசகர்களும் உறுதி செய்து கொள்ள முடியும்.
Dear Prakash,
Even I dont remember posting a comment here..anyway, haikkooo is interesting :)
ROSAVASANTH said…
என்ன எழவு இதென்று புரியவில்லை. இந்த பதிவே உண்மையா என்று புரியவில்லை. ரவியை போலவே இங்கே நான் எதையும் எழுதவில்லை. என் பெயரில் எழுதப்பட்ட எதையும் நான் எழுதவில்லை. கார்திக்(?) உண்மை என்று எடுத்துகொண்டு எழுதியதாக தெரிகிறது-அது உண்மையிலேயே கார்திக்கால் எழுதப்பட்டிருந்தால். நான் இந்த பதிவையே படிக்கவில்லை. இந்த பின்னூட்டம் என்னால் எழுதப்பட்டது என்பதை என் பதிவில் உறுதிபடுத்துகிறேன்.
இந்தப் பதிவையே நான் இப்பதான் பார்க்கிறேன்!

பிரகாஷ், உங்ககிட்ட இருந்து கடிதம் ஏதும் வராததால, நீங்க அந்தப் பின்னூட்டம் என்னிடமிருந்து வரவில்லை என்று புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

-மதி
ROSAVASANTH said…
PKS பின்னூட்டமும் போலியானது என்று தெரிகிறது. thanks மட்டும் போட்டுவிட்டு thanks and regards என்று எழுதாததால்..
ROSAVASANTH said…
எனகென்னவோ இது இகாரஸ் விளையாடும் விளையாட்டாக அல்லது, இகாரஸ்பதிவில் யாரோ விளையாடும் விளையாட்டாக தெரிகிறது. தெளிவானதும் என் பின்னூட்டங்கள் பற்றி எழுதுகிறேன்.
**************
////இந்தப் பதிவுவை ஏன் எல்லொரும் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்//

நெத்தியடியாய் அடித்திருக்கிறீர்கள் ரோசாவசந்த். ஏன் இந்த வாரம் போட்டியில் கலந்து கொள்ளவில்லை? உங்களுக்காகக் காத்திருக்கிறேன். இன்னும் இரண்டு பாடல்கள் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது. இந்தப் பதிவைப் பார்க்கவும்
http://balaji_ammu.blogspot.com/2005_05_01_balaji_ammu_archive.html

என்றென்றும் அன்புடன்
பாலா
*******************
I did not actually make this comment as I did not understand the intent of this "pathivu" anyway ;-)
ROSAVASANTH said…
எனக்கென்னவோ எல்லா பின்னூட்டமுமே போலி என்று தோன்றுகிறது. பிரகாஷ் இதை செய்திருந்தாலும், யார் இதை செய்திருந்தாலும், செயல் நேர்த்திக்காக பாரட்டுகிறேன். குறிப்பாக என் பின்னூட்டங்கள் என்னை பற்றிய நல்ல கிண்டலை வெளிப்படுத்துகிறது. என் பாராட்டை தெரிவிக்க ஒரு +குத்து துத்துகிறேன்.
இது பகடிகளின் காலம் போல. உங்கள் 'ஹைகூ' வை விட கற்பனைப் 'பின்னூட்டங்கள்' நிஜமாகவே நன்றாக இருக்கின்றன.:-)
(இதுக்கு மேல ஏதாவது சொன்னா என்னையும் அடுத்த பகடியில் சேர்த்துடுவிங்களோன்னு பயமா இருக்குது)
பிரகாஷ்
நல்ல நகைச்சுவை. அதுவும் ரோசாவசந்த், டோண்டுவின் பின்னூட்டங்கள்போன்ற கற்பனை அபாரம்.பாராட்டுக்கள்.
நண்பர்கள் மீது நம்பிக்கை வைத்து ரொம்ப ரியலிஸ்ட்டிக்காகச் செய்து விட்டேன். இது கலப்படமில்லாத அக்மார்க் கற்பனையால் செய்யப் பட்டது என்று போட்டிருக்க வேண்டும். அப்படிப் போட்டதாக நினைத்து, மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கவும்.
ரவிஸ்ரீனிவாஸ், இதை கிண்டல் என்று உணர்ந்து, அவரும் பதிலுக்குக் கிண்டல் செய்தாரா, இல்லை நிசமாகவே கோபம் வந்துவிட்டதா என்று விளங்கவில்லை
//உங்கள் 'ஹைகூ' வை விட கற்பனைப் 'பின்னூட்டங்கள்' நிஜமாகவே நன்றாக இருக்கின்றன.:-)//

சுந்தரமூர்த்தி, நன்றி.

//(இதுக்கு மேல ஏதாவது சொன்னா என்னையும் அடுத்த பகடியில் சேர்த்துடுவிங்களோன்னு பயமா இருக்குது) //

இதிலேயே இழுத்திருப்பேன், அடுத்தவாட்டி இன்னும் இஸ்டிராங்கா விஷயம் கிடைக்கும் போது வெச்சுக்கலாம்னு விட்டுட்டேன் :-)
//பிரகாஷ்
நல்ல நகைச்சுவை. அதுவும் ரோசாவசந்த், டோண்டுவின் பின்னூட்டங்கள்போன்ற கற்பனை அபாரம்.பாராட்டுக்கள். //

தேன்துளி பத்மா, மிக்க நன்றி
கடவுளே! :))

இப்ப ஒரிஜினலை விட கிண்டல் பதிவுகளும் சட்டயர் பதிவுகளும் சூப்பர்!

இந்த வாரம் உங்களோட இந்தப் பதிவும், ரோஸாவசந்தின் பதிவும் கலக்கல்.

-மதி
நன்றி மதி...

வலைப்பூ ஆசிரியராக ரமணீ இருந்த போது, இதைப் போலவே செய்தார். ( என் isp இல், yarl.net வேலை செய்யாது, அதனால் இணைப்பு கிடைக்கவில்லை) அந்த பாதிப்பில் ஒன்று செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்தேன். ரோசாவின் அன்னியன் பதிவையும், பின்னூட்டங்களைப் பார்த்ததும், உற்சாகம் வந்து, உடனே எழுதினேன்.
thalaivA,
payangkaramA kavuththitIngka :)
Well Done ! pArAttukkaL !!!
****************
+ + ஞானபீடம் + +
****************

போலிகளைக் கண்டு .... ஏமாறாதீர்கள்;

- No - No - No -

போலிகளைக் கண்டு... சிரிப்போம் !! !! !!.

****************
+ + ஞானபீடம் + +
****************
பிரகாஷ்,
மீண்டும் ஹைக்கூவைப் படித்தேன். மிகவும் அருமை. சிறுபிழையைத் திருத்தினால் இன்னும் அருமையாக இருக்கும்.
//ஞஙண நமன//
இது 'ஙஞண நமன' என்றிருக்க வேண்டும்.

பண்ணைபுரத்து தலைவர் ஒரு பாட்டு பாடியிருக்கிறாரே:
'காத்து குளிரெடுக்குதைய்யா...
ஙஞண நமன ஜங்...'

இதுக்கு சுட்டி இருந்தா கொடுங்களேன். கேட்டு ரொம்ப நாளாகிறது.
பிரகாஷ் ஐ....யா......கொஞ்சம் முதுகில் தட்டிக்கொள்ளுங்க.

நல்ல நகைச்சுவை இது - அதிலும் தமிழ்மணக் கதாபாத்திரங்களைப் பிரதிபலிக்கும் விமர்சனமான நகைச்சுவை. உண்மையிலேயே வாய் விட்டுச் சிரித்தேன் (என் பெயரில் வந்த பின்னூட்டம் உள்பட).

நன்றி - சொ. சங்கரபாண்டி
PKS said…
Ayya Icarus, Enna Aachi Ungaluku. :-) Full Formla irukeenga pola. En peyaril irukira pinnotangalai (naan ezuthavillai enraalum) rasithean.

Thanks and regards, PK Sivakumar
Thangamani said…
நல்ல பதிவு பிரகாஷ் :-) .நன்றி
Venkat said…
பிரகாஷ் - நீங்க எழுதாததால நானே எழுதிட்றேன். :)

வழக்கம்போல வேலைப்பளு வாரக்கடைசியில் வரமுடியவில்லை. ஏற்கனவே மைக்ரோஸாப்ட்டை பற்றி நீங்கள் கேட்ட கேள்விக்கே இன்னும் விரிவான பதில் பாக்கியிருக்கிற்து. இடையில் இன்னும் ரெண்டு ராஜா பாட்டு போடனும். இன்றைக்கு எஸ்.பி.பி பாடிய மற்றவர்கள் பாட்டைத்தான் போடமுடிந்தது. அதில் நம் தூள் பாலாஜி கேட்டிருக்கும் கேள்விக்கு உங்க விடை என்ன? நம் மக்களுக்கு அறிவியில் சிந்தனை கொஞ்சமும் கிடையாது. ஆங்கிலத்தில் இலக்கண சுத்தமாக எழுத வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தமிழில் மாத்திரம் இப்படி எழுதுவது நம் சாபக்கேடு.

டிஸ்க்ளெய்மர் : போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். அசலைக் கண்டே ஏமாறுங்கள்.
-L-L-D-a-s-u said…
தமிழ்மண பெருசுக எல்லாம் சண்டய போடாம ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார்கள் ..இதை நடத்தி காட்டியதற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள் இகாரஸ் .
அன்பு said…
கலக்கல் பிரகாஸ்...
இன்று வேறுசில பதிவுகளையும், பின்னூட்டங்களையும் படித்துவிட்ட் - இதென்ன வேற வேலையா இல்லையா, எல்லாரும் ஒரே பிரச்னை, அதற்குப் பரிகாரம் - அதுதொடர்பான தொடர்பிரச்னைன்னு எழுதிட்டுரிக்காங்கன்னு சற்று வெம்பினேன்...

ஆனால், உங்களின் இந்தப்பதிவி இன்று/இப்போது படித்து சிரிசிரி... என்று சிரித்துக்கொண்டிருக்கிறேன் (மன்சுள்தான்)...

ரொம்ப்ப்ப்ப்பா நன்றி.
ROSAVASANTH said…
// நான் பின்னூட்டமிட்டதாக கருதி அங்கு ஒருவர் ஒரு முட்டாள்த்தனமான அபிப்பிராயத்தை உதிர்த்திருக்கிறார்/

பிராகாஷ் சண்டை எதுவும் வரவில்லை என்று சந்தோஷப்படுவதால்.

ரவி அவர் பின்னூட்டமிட்டதாக நான் கருதி முட்டாள்தனமாய் கருத்து சொன்னதாய் நினைத்திருக்கிறார். இப்போது யார் தவறாக கருதி முட்டாள்தனமாய் கருத்து சொல்லியிருக்கிறார்கள் என்று புலப்பட்டுவிட்டது. அவருக்கு என் நன்றி.
சுந்தரமூர்த்தி, சங்கரபாண்டி சார், பி.கே.எஸ், வெங்கட், தங்கமணி, அன்பு, எல்.எல், தாஸ், பாலா, அனைவருக்கும் நன்றி ( சங்கரபாண்டி சார், உண்மையிலே, நீங்கதான் கோச்சுப்பீங்கன்னு நினைச்சேன், லைட்டா எடுத்துக்கிட்டதுக்கு நன்றி)
//ரவி அவர் பின்னூட்டமிட்டதாக நான் கருதி முட்டாள்தனமாய் கருத்து சொன்னதாய் நினைத்திருக்கிறார். இப்போது யார் தவறாக கருதி முட்டாள்தனமாய் கருத்து சொல்லியிருக்கிறார்கள் என்று புலப்பட்டுவிட்டது. அவருக்கு என் நன்றி. //

அய்யய்யோ ரோசா... :) :) :) புள்ளையார் கொரங்கு கதையாயிருச்சே....
நான் எழுதியாக வந்த பின்னூட்டங்கள் மிக அருமை. நன்கு ரசித்தேன். அதுவும் சில நாட்களாக போலி டோண்டு வந்து என் நிம்மதியை கெடுத்த இந்த நேரத்தில் உங்கள் இந்தப் பதிவு சூப்பரோ சூப்பர்.

பை தி வே வாய்ஸ் ஆன் விங்க்ஸ் சொன்ன யோசனை அருமை. என் ப்ரொஃபைலில் போட்டோவைப் போட்டு விட்டேன், என் ப்ளாக்கர் எண்ணும் என் டிஸ்ப்ளே பெயரில் வருகிறது. பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
Shankar said…
thaleevaa! attakaasam! ROTFL :))))
என் பாராட்டையும் ஒரு ஹைக்கூவாக எழுதிவிடுகிறேனே!

சந்துல சிந்து
உருளுது பந்து
நூல்நூலா நொந்து!
ROSAVASANTH said…
//சங்கரபாண்டி சார், உண்மையிலே, நீங்கதான் கோச்சுப்பீங்கன்னு நினைச்சேன், லைட்டா எடுத்துக்கிட்டதுக்கு நன்றி//

அய்யா இகாரஸ், இருக்கறதுலேயே மாத்தி மாத்தி கிண்டலடிக்கப்பட்டது நான். லைட்டா எடுத்துகொண்டது மட்டுமின்றி, உங்களுக்கு முதன் முதல் பாராட்டும் ஒரு + குத்தும் விட்டிருக்கேன். ம்.. நான் டேக் இட் ஃபார் க்ராண்டட் போல! பரவாயில்லை.
Pavals said…
:-)..கலக்கிட்டீங்க தல!
எல்லாரும் லைட்டா எடுத்துகிட்டாங்க.. சரி.. மாயவரத்தான் பின்னுட்டத்த காணோமே??
Vijayakumar said…
என்னமோ நடக்குது? நமெக்கன்ன கவலை.

வந்ததுக்கு ஒரு இக்கூ கவிதையை போட்டுட்டு போயிர வேண்டியதான்.

"இரவின் சப்தம்
கொர்ர்ர்ர்ர்ர்"
I have posted the following comment in my blog as a comment
to respond to the comment made by rosa vasanth.it i post it here also for your information

பிரகாஷின் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தில் என் பெயர் தெரியவில்லை என்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.அதை என் பதிவிலும் எழுதியுள்ளேன்.ஏற்கனவே ஒரு முறை ரோசாவசந்த்தின் பதிவில் இது போல் ஒரு ஆள்மாறாட்ட குழப்பம் நடந்தது எனக்குத் தெரியும். எனவே தான் பிரகாஷின் பதிவில் எழுதியது ரோசா வசந்த் தானா என்பது குறித்து எனக்கு ஐயம் இருந்தது. ஆகையால் பெயரைக் குறிப்பிடாமல் ஒருவர் என்று குறிப்பிட்டேன். ரோசா வசந்த்தான் அதை எழுதியிருக்கிறார் என்பது சரியாகத் தெரியாதப் போது தேவையற்ற சர்ச்சையினை தவிர்க்கவே ஒருவர் என்ற வார்த்தையினை அங்கு பயன்படுத்தியுள்ளேன். அடுத்த வாக்கியத்தில் அதைப் பற்றி
வேறெதுவும் குறிப்பிடாமல் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க என்ன செய்யவிருக்கிறேன் என்பதைத் தெரிவித்திருக்கிறேன். இதிலிருந்து நான் ரோசாவசந்த் பெயரில் வெளியான ஆனால் அவர் எழுதாத வாக்கியங்கள் குறித்து ஒரு சர்ச்சையை எழுப்ப முயலவில்லை என்பது தெளிவாகும்.

ரோசாவசந்த்தின் பதிவுகளை நான் படித்தாலும் நான் சிலகாலமாக அவர் பதிவுகளில் பின்னூட்டம் இடுவதில்லை என்பதும், அவருடன் விவாதத்தில் ஈடுபடுவதில்லை என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இதையெல்லாம் கூட தெளிவுபடுத்த வேண்டிய சூழல் இங்கு நிலவுகிறது.
SnackDragon said…
அடப்பாவிகளா, என்ன கூத்து இது? இங்கு கார்த்திக் ராமாஸ் என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒரு
பின்னூட்டம் கூட நான் எழுதவில்லை(இதைத்தவிர). பெயரிலி என்று எழுதியதும் பெயரிலியா எனத் தெரியவில்லை. பிரகாஷ் இப்படி விளையாடுவார் என்று நான் நம்பமாட்டேன்.
SnackDragon said…
எல்லா பின்னூட்டங்களையும் இப்போதான் படித்தேன். பிரகாஷ் தான் தான் செய்ததாய் சொல்லியியுள்ளார்.
அது உண்மையான முகமூடி இல்லாத பிரகாஷ்-ஆய் இருந்தால் அவருக்கு பாரட்டுக்கள். அப்பவே கொஞ்சம் டவுட் வந்தது. :-)
பிரகாஷ் அந்த " பிரகாஸ் பாயை பிறாண்டுகிறார்" என்றதை இதுவரை ரோசா எழுதி பார்த்ததில்லை, அது தவிர மற்றதெல்லாம் நகைச்சுவையாக உள்ளது. :-)
SnackDragon said…
//நண்பர்கள் மீது நம்பிக்கை வைத்து ரொம்ப ரியலிஸ்ட்டிக்காகச் செய்து விட்டேன். இது கலப்படமில்லாத அக்மார்க் கற்பனையால் செய்யப் பட்டது என்று போட்டிருக்க வேண்டும். அப்படிப் போட்டதாக நினைத்து, மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கவும்.//
அப்படிப் போட்டதாக நினைத்து, மீண்டும் ஒரு முறை படித்துப்பார்த்தேன். நன்றாக சிரித்தேன்.
நன்றி பிரகாஸ்க். :-))
நல்ல பகிடி ;-) தலைப்பும் நன்று
//வலைப்பூ ஆசிரியராக ரமணீ இருந்த போது, இதைப் போலவே செய்தார்.//
நல்ல கூத்து :))

நீங்க சொன்னது பெயரிலியின் இந்தப் பூனைப் பதிவைத்தானே!

http://valaippoo.yarl.net/archives/001850.html
ROSAVASANTH said…
ரவி என்னை முட்டாள்தனமாக என்று சொன்னாரா என்று தெரியாது. அப்படி சொல்லியிருந்தாலும் (இது போன்ற சமாச்சாரங்களீல்) பெரிய பிரச்சனை கிடையாது. 'சண்டை போடாமல் எல்லாம் ஜாலியாய் இருக்கிரது'என்று சொன்னதால் அதே ஜாலியுடன் 'சண்டைபோட' எழுதினேன்.
.:dYNo:. said…
Had a Hearty laugh!

.:dYNo:.
Mookku Sundar said…
கமெண்டை ஃபுல்லா படிக்காம, என் பங்குக்கு நானும் ரவி ஸ்ரீநி மாதிரி எழுதி, பப்ளீஷ் பண்ணி, அப்புறம் அது சுரீரென்று மண்டையில் உறைக்க, அழித்துவிட்டு.....

....

சிரித்துக் கொண்டே இருந்தேன்.

பிரகாசரே.. நாயமா. இது..??
Thangamani said…
//பிரகாஷ்-ஆய் இருந்தால் அவருக்கு பாரட்டுக்கள்.//

இதுக்கெல்லாம் பாராட்டு தெரிவிக்கிறது கொஞ்சம் அதிகம் கார்த்திக்!
:))
டோண்டு சார், ஷங்கர், ராசா, விஜய், பெயரிலி, தங்கமணி, பாம்பு, பெயரிலி, கார்த்திக் அனைவருக்கும் நன்றி.

சுந்தரவடிவேல், ஆம், நான் குறிப்பிட்டிருந்தது அந்தப் பதிவைத்தான். சுட்டிக்கு நன்றி.

டைனோ : ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க, வாங்க.

சுந்தர் : நாம நம்ம கிட்ட வெளையாடாம வேற எங்கிட்டுப் போய் வெளையாடறது? ரொம்ப போரடிச்சுது.. அதான்.. இப்பிடி :-)

பின்னூட்டம் தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் பதிவின் மூலம் யாராவது, மனசு வருத்தப் பட்டிருந்தால் மன்னிக்கவும்.
////பிரகாஷ்-ஆய் இருந்தால் அவருக்கு பாரட்டுக்கள்.//

இதுக்கெல்லாம் பாராட்டு தெரிவிக்கிறது கொஞ்சம் அதிகம் கார்த்திக்!
:)) //

அதானே... காலங்காலமா எல்லாரும் ' இருக்கறது ' தான். இதுக்கு எதுக்கு தனியா எனக்கு பாரட்டு?
நீங்க ஒரு தபா 'இருந்தா' அது நூறு தபா 'இருக்கிறதுது' மாதிரின்னும் ஜனங்க பேசிக்கறாங்க, மெய்யாலுமா அப்படித்தானா :)
This comment has been removed by a blog administrator.
//சங்கரபாண்டி சார், உண்மையிலே, நீங்கதான் கோச்சுப்பீங்கன்னு நினைச்சேன், லைட்டா எடுத்துக்கிட்டதுக்கு நன்றி//

நான் மட்டும் கோச்சுப்பேன்னு நினைச்சதனால உங்கள் மேலே கோச்சுகினு வழக்குப் போடப் போறேன் :-)

பின்னூட்டத்தை வைத்தே அந்த முடிவுக்கு வந்திட்டீங்கன்னா நான் பதிவு எழுதினா எப்படியிருக்கும்னு யோசிக்கிறேண் :-)

Soc. Culture. Tamil ஆரம்பக் காலத்தில் அதில் எழுதியவர்கள் கொஞ்சம் பேர் றொரோண்டாவில் சந்திச்சோம். அப்பக் கூட நிறைய பேர் என்னை நேரில் பார்த்தபோது நம்பவில்லை. உம்மணா மூஞ்சியா இருப்பேன்னு நினைச்சதா சொன்னாங்க.

நான் எழுதுற தொனி அப்படி தீவிரமா/சீரியஸா இருக்கோன்னு நினைக்கிறேன். இனிமேல் பெயரிலி மற்றும் பெயரில்லா கும்பல் அடிக்கும் லூட்டியிலெல்லாம் கலந்துக்கணும்னு நினைக்கிறேன் :-) கும்பல்னு சொன்னதுக்கு தர்ம அடி போடாதீங்க, நான் சொல்றது ஜெயகாந்தன் குறிப்பிட்ட கும்பலில்லை :-)

அப்புறம் பிரகாஷ், இந்த 'சார்' எல்லாம் வேண்டாம். நரை முடி வந்திருச்சு, இருந்தாலும் ரொம்ப வயசாயிடல :-) வெறும் சங்கரபாண்டி போதும்!
நன்றி - சொ. சங்கரபாண்டி
ஹைக்கூ எழுதிட்டு "இது எப்படி இருக்கு?" ன்னு கேட்டப்பவே நெனச்சேன், 'பரட்ட பத்த வச்சிட்டியே'. செய்யறத செஞ்சிட்டு இப்போ "யாராவது மனசு வருத்தப் பட்டிருந்தால் மன்னிக்கவும்" ன்னு எழுதினா விட்டிடுவாங்களா? பாதிக்கப்பட்டவங்க யாராவது சீக்கிரம் வழக்கு போடுங்க!
Dear Prakash Sir,

Plz. check..

http://mayavarathaan.blogspot.com/2005/06/blog-post_19.html
//???? (Raasa) said...
:-)..கலக்கிட்டீங்க தல!
எல்லாரும் லைட்டா எடுத்துகிட்டாங்க.. சரி.. மாயவரத்தான் பின்னுட்டத்த காணோமே?? //

ராசா... நியாயமா பார்த்தா இந்த கேள்வியை நம்ம குழலியோ, மரமோ இல்லே கேட்டிருக்கணும்?! சரி... சரி.. என்னோட கருத்து என்னன்னா...நம்ம(?!) பா.ம.க. ராமதாஸ் இருக்காரே.. அவரு இப்படி தான் சம்பந்தம் சம்பந்தமேயில்லாம ஒரு பதிவிலே எல்லாரையும் இழுத்து விட்டு எஸ்கேப் ஆகிடுவாரு. அதுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்க நம்ம சூப்பர் ஸ்டார் இருக்காரே, அவரு என்ன செய்வாருன்னா...(போதும்...போதும்..!) :)))) குழலி வரதுக்குள்ளே.. நான் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்..! (பிரகாஷ் சார்.. இருந்தாலும் நான் என்னவோ சம்பந்தம் சம்பந்தமேயில்லாம பின்னூட்டமிட்டுட்டு அப்புறமா வந்து அதை நீக்கிட்டு போற மாதிரி ஒரு இமேஜை மேலே உருவாக்கியிருக்கிறீங்க. பகிரங்க பொது ம்ன்னிப்பு தமிழ்மண லிஸ்ட்டிலே இருக்கிற ஐநூத்து சொச்சம் வலைப்பதிவ்லேயும் போய் கேக்கலைன்னா இதுக்காக உங்க மேல நான் மான நஷ்ட வழக்கு போடப்போறேன். ஒரு நல்ல லாயரா இருந்தா சொல்லுங்க!)
ரொம்ப லேட்டா வந்துட்டேன். பிரகாஷ்ஜி, கலக்கிட்டீங்க. பின்னூட்டத்தை சரியான இடத்துலதான் போடறோமா இல்லாட்டி பதிவுலேயே போடறோமன்னு கொஞ்சம் கன்புயூஷன் ஆகிப்போச்சு!
ரவியா said…
பிரகாஷ் ! இப்பதான் பார்த்தேன்..
:)))))))
அன்பு பிரகாஷ்,

இப்போதுதான் பார்க்கிறேன். சுவாரசியமான விளையாட்டுதான் இது. 'எல்லாம் முடிந்த பிறகு' பார்ப்பதினால் எனக்கு அதிக சுவாரசியமாக தோன்றவில்லை. முன்பே பார்த்திருந்தால் என்னிடமிருந்தும் ஒரு 'குய்யோ முறையோ' பின்னூட்டம் வந்திருக்கும். இருந்தாலும் உங்கள் 'பொய்க்கூ' விற்கு நான் உண்மையாகவே பின்னூட்டமிட்டிருந்தால் அது இப்படித்தானிருந்திருக்கும்.

"பிரகாஷ், சென்னையில் வெயில் அதிகம்தான். இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக......." :-)
அப்பாடி.

தமிழ் வலைப்பதிவுகள் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டன.

சூப்பர். கலக்கிட்டீங்க போங்க.

நேத்து பேசும்போது படிக்கலைன்னு சொல்ல அவகாசம் இல்லை. இன்னிக்குதான் படிச்சேன். ஹி, ஹி, ஹீ.
Prakash,

Just now happen to Read..!

Kallakkal Post.!!!
gulf-tamilan said…
enna nadakirathu inkga onnrum puriyavilai.
அன்பு said…
மீண்டுமொருமுறை ரசித்து மகிழ முடிந்தது - நன்றி பிரகாஷ் & Scott:)
###கசட தபற
யரல வழள
ஞஙண நமன

இது எப்படி இருக்கு?###


அடப் பாவமே
ப்ரகாஷ் என்ன ஆச்சு

கசட தபற
ஙஞண நமன
யரல வழள இல்லையா

ஓ!

வல்லினம்
இடையினம்
மெல்லினம்

இடையினம் என்பதால் இடையிலா?

பிடிச்சிது எனக்கும் ஹைக்கூ பைத்தியம்

இதென்ன தொற்று நோயா?
இது ஓக்கேயா?

நூதன ஹைக்கூ
===============
அஆ இஈ உஊ
எஏ ஐ ஒஓஔ
அன்பு said…
மீண்டும் ஒருமுறை படிச்சு சிரித்தேன்...

ப்ரகாஷ், இது ஒரு "காலத்தை வென்ற பதிவா"யிடுச்சு. எத்தனை தடவை படிச்சாலும் அலுக்கவே இல்லை. ஒவ்வொருதடவையும் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்குது. :))
(பி.கு: நன்றீ JSri :)
அட... இந்தப் பதிவு இன்னும் உயிரோடத்தான் இருக்கா? நன்றி அன்பு, ஜெயஸ்ரீ..
என்னதுங்க இப்படி ஒரு சேட்டை செய்திருக்கின்றீர்,இப்போது தான் பார்த்தேன்.
நன்பர் ஒருவர் மூலம் இந்த பதிவு சுட்டி கிடைத்தது....மிக ரசிக்கும் பதிவுகளில் ஒன்றாகி விட்டது... இப்பொது இரவு 12.45 மணி.. மெலிதாக சிரித்துக் கொண்டே படித்தேன்.. இது வரும்வரை...

//அதானே... காலங்காலமா எல்லாரும் ' இருக்கறது ' தான். இதுக்கு எதுக்கு தனியா எனக்கு பாரட்டு?//
புரிந்ததும் சத்தமாகவே சிரித்து விட்டேன்...நல்ல வேலை என் மனைவியும் குழந்தையும் முழிக்க வில்லை... அப்புரம் சிரமப்பட்டு சமாளித்துக்கோண்டேன்.....

அருமையான நகைச்சுவை பதிவு...
ஹா! ஹா!! ஹா!!!

பாவூரான்.

பி.கு: உண்மையிலேயே என் நேற்றைய பதிவு காணாமல் போய் விட்டது.

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்