Posts

Showing posts from January, 2004

ஒரு கேள்வி - ஒரு பதில்

Image
கேள்வி : பத்து வருடங்களுக்கு முன்பு, ஒரு நேர்-காணலின் போது, இயக்குனர் பாலுமகேந்திரா, தமிழ் பத்திரிக்கைகளைப் பற்றி பின்வரும் அபிப்ராயயத்தை வெளியிட்டார். " பெரும் பத்திரிக்கைகளான ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் ஆகிய பத்திரிக்கைளின் அட்டைப் படத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால், ஒன்றுக்கொன்று எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. அட்டைப் படத்தை நீக்கி விட்டால் எல்லா பத்திரிக்கையும் ஒன்றுதான் ". இது ஒரு மேம்போக்கானகுற்றச்சாட்டா அல்லது ஏதேனும் உள்ளார்ந்த அர்த்தம் இருக்கிறதா? உங்கள் கருத்து என்ன? ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில், பத்திரிக்கைகளின் தற்போதைய நிலைமை என்ன? பதில் : பா.ராகவன் அட்டைப்படத்தை நீக்கினால் எல்லா பத்திரிகைகளும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன என்றொரு கருத்து இருப்பதை அறிவேன். அதைச் சொன்னது பாலுமகேந்திராவா, பத்து வருஷங்களுக்கு முன்னரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னளவில் இந்தக் கருத்து மிகவும் தவறானது. எதற்காக அட்டைப்படத்தை நீக்கவேண்டும்? லோகோவை மட்டும் நீக்கினால் போதும். எல்லாம் ஒன்றேதான். அதாவது இடம்பெறும் விஷயங்கள். ப

தமிழ் இலக்கியம் 2004 - தொகுப்பு

1. தமிழ் இலக்கியம் 2004 - வலைபரப்பு - பத்ரி 2. தமிழ் இலக்கியம் 2004 - பா.ராகவன் 3. பா.ராகவன் வாசித்த கட்டுரை 4. இரா.முருகன் வாசித்த கட்டுரை. 5. தமிழ் இலக்கியம் 2004, பலே பத்ரி - இரா.முருகன் 6. முதல் நாள் நிகழ்ச்சிகள் - இரா.முருகன் 7. தமிழ் இலக்கியம் 2004 - snippets - இகாரஸ் 8. இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் - sidelights 1 - இரா.முருகன் 9. இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் - sidelights 2 - இரா.முருகன் 10. தமிழ் இலக்கியம் 2004 - 1 - பத்ரி 11. தமிழ் இலக்கியம் 2004 - 2 - பத்ரி 12. தமிழ் இலக்கியம் 2004 - 3 - பத்ரி 13. சச்சிதானந்தன் உரை - வாஞ்சி 14. எழுத்துக்காரன் பார்வையில் - கோவை ஞானி - இரா.முருகன் 15. எழுத்துக்காரன் பார்வையில் - சிறீசுகந்தராஜா - இரா.முருகன் 16. எழுத்துக்காரன் பார்வையில் - திருப்பூர் கிருஷ்ணன்-இரா.முருகன் 17. எழுத்துக்காரன் பார்வையில் - கவிஞர்கள் - இரா.முருகன்

Dot.commers

Image
இங்கே வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது. வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? வேலைதான். பிப்ரவரி முதல் வாரம் வரை, இப்படி இழுபறியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. சென்ற வாரம் முழுக்க, தாய்வீட்டிலும் அவ்வளவாக நேரம் செலவழிக்க முடியவில்லை,. அதுக்கும் வேலைப் பளு தான் காரணம். ந்யூஸ் பேப்பரில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை வாசித்தேன் . டாட்.காம் பற்றிய ஒரு கட்டுரை. கிட்டதட்ட extinct என்று நினைத்திருந்த டாட்.காம்கள், மீண்டும் எப்போது முழுக்க பக்க கட்டுரை அந்தஸ்தை அடைந்தது என்று ஆர்வமாகப் படிக்க விஷயம் விளங்கியது. கொஞ்சம் விவரமாகச் சொல்கிறேன். 1996களில் இருந்து இந்த நூற்றாண்டு ஆரம்பம் வரை, கலக்கிக் கொண்டிருந்த இந்த டாட்காம் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. என்ன, அந்த புரிதலின் அளவு வெவ்வேறாக இருக்கும். ஆனால், ஏதாவது ஒன்று தெரிந்திருக்கும். " நம்ம ஷோபனாவுக்கு பாத்திருக்க மாப்பிள்ளை, அமெரிக்காவுலே ஒரு டாட்.காமிலே வேலை செய்யறானாம் " என்று பங்கஜம் மாமி வந்து சகஜமாக உரையாடும் அளவுக்கு. ( அந்த மாப்பிள்ளை, பின்னால், பழைய வேலைக்கே திரும்பி, சென்னையில் இப்போது ஒரு செல்போன் நிறுவனத்தில், ட
Image
"It's called practical brand positioning. The cheapest brand goes to the unreachable top shelf." Courtesy:The Hindu Businessline , 31st Oct 2002