Posts

Showing posts from December, 2005

டூரிங் டாக்கீஸ்

[ [ இந்த வார நட்சத்திரத்தின் சமீபத்திய பதிவின் பாதிப்பில்] ] சென்னைக்குக் குடிபெயர்ந்த நாட்களில், பாட்டியுடன் தான் வாசம் என்பதால், சினிமா பார்க்கிற வாய்ப்புகள் ரொம்ப அபூர்வமாகவே கிடைக்கும். இத்தனைக்கும் நாலு கட்டிடம் தள்ளி கபாலி டால்கீஸ் ( அது டாக்கீஸ் என்று பின்னாளில் தான் தெரிய வந்தது ). காலைக் காட்சியில் வடிவுக்கு வளைகாப்பு, காத்தவராயன், டவுன்பஸ் போன்ற படங்களும், ரெகுலர் காட்சிகளில், செகண்ட் ரீலிஸ் புதுப்படங்களும் வரும். கூட்டிப் போவதற்கு யாரும் கிடையாது. பள்ளிக்கூடம் போகும் போது நைசாக தியேட்டருக்குள் போய், வெல்வெட்டு போர்டில் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படங்களை எல்லாம் வாயில் ஈ புகாமல் பராக்கு பார்த்துக் கொண்டிருந்த போது, அந்த வழியாக போய்க்கொண்டிருந்த விசாலம் மாமி ( எங்க ஒண்டுக் குடித்தன வீட்டின் நெய்பர்), பாட்டியிடம் போட்டுக் கொடுக்க, " வரட்டும் ஙொப்பன் கிட்ட சொல்றேன்.. என்று மிரட்டிக் கெ¡ண்டே இருந்தாள். 92 ஆம் வருஷத்தில் அவள் செத்துப் போகிற வரையிலும் சொல்லவே இல்லை. அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் எல்லாம் 'ரெக்கமெண்டு' செய்தார்கள் என்ற காரணத்துக்காக, முதல் முறையாக எனக்க

அப்துல் ஜப்பார்

இந்த மாதிரி niche வலைப்பதிவுகளில் இருக்கிற ஒரு பெரிய சிக்கலே, அது ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே எழுதப்பட்டு, சின்ன வட்டத்துக்குள்ளேயே படிக்கப்பட்டு, பின்னர் மறந்து விடும் என்பதுதான். கிரிக்கெட் கூட்டுவலைப்பதிவு , பெரும்பாலும் நடந்த ஆட்டத்தைப் பற்றிய வர்ணனையாகத்தான் இருக்கும் என்பதாலும், தன்னை மறந்து பார்த்து ரசிக்கிற ஆட்டத்தின் finer aspect கள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் அத்தனை ஈடுபாடு இல்லை என்பதாலும் கவனமாகப் படிப்பதில்லை. அப்படி தள்ளிவிட்டு போக இருந்த நேரத்திலே, பா.விஜயின் 'உடைந்த நிலாக்கள்' என்று ஒரு பதிவு துவங்க, என்னடா இது புதுசா என்று உள்ளே போய் பார்த்தால், கிரிக்கெட் பற்றிய 'அப்துல் ஜப்பார்' எழுதிய ஒரு நல்ல கட்டுரையை, ஆசீப் மீரான் வலைப்பதிவில் போட்டிருக்கிறார் . சென்னையில் நடந்த கிரிக்கெட் ஆட்டங்களின் போது, பள்ளிக்கு கண்டிப்பாக லீவு போடக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவுக்கு பயந்து, சிங்கப்பூரில் இருந்து ரேடியோவும், இயர் ·போனும் இருக்கிற வாட்சை வைத்திருந்த நண்பனுடன் ஒட்டிக் கொண்டு கேட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன. 89 ரிலையன்ஸ் கப்பின் போது வீட்டுக்கு டீவி வந்து

கர்நாடக காவல்துறையின் வலைப்பதிவு

எதையோ நோண்டிக்கொண்டிருந்த பொழுது, ஹிந்து நாளிதழ் வழியாக இந்தச் செய்தி கிடைத்தது. தென் கர்நாடக காவல்துறை கண்காணிப்பாளர் பி.தயானந்தா, IPS, இந்த வலைப்பதிவை துவக்கி எழுதி வருகிறார். அவருடைய சரகத்துக்குள் நடைபெறுகிற சட்டம் ஒழுங்கு தொடர்பான விஷயங்களைத் மக்களுக்கு, இந்த வலைப்பதிவில் அளித்து வருகிறார். இந்த வலைப்பதிவில், அவர் அவர் சொல்வதாவது... This weblog has been created by the Dakshina Kannada Police with the purpose of disseminating police news of the district to those interested. Authentic and official information of DK Police will be posted here regularly. This is just an attempt to create an interface with the press and the public at large. Your views and suggestions are welcome. B.Dayananda IPS Superintendent of Police Dakshina Kannada District MANGALORE Karnataka.. காவல்துறை, இப்படி ஒரு வலைப்பதிவை துவங்குவது இது தான் முதன் முறை என்று நினைக்கிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவரே!

Image
சேமித்து வைத்திருக்கும் பழைய குப்பையில் இருந்து ஒரு பகுதி. எழுதியவர் இளவஞ்சி .....அப்போது முரளி என்ற என் நண்பன் ரஜினி பைத்தியமாகவே இருந்தான். ஒரு படத்தையும் விடமாட்டான். டிவியில் ரஜினி படமென்றால் அப்படியே கேமல் கம்மை தரையில் ஊற்றி அதில் ஒட்டியதுபோல எங்கயும் நகராமல் ஒன்றிவிடுவான். நாங்கள் அடிக்கும் இத்தனை கிண்டல்களுக்கும் சிரித்துகொண்டே போய்விடுவான். ஒருநாள் இந்த ரவுசு ஓவராகப்போக அவன் சொன்னது எனக்கு மிகவும் பிடித்துப்போனது. "நம்ப வீட்டு குழந்தை தத்தக்கா பித்தக்கானு நடந்தாலும், தப்பு தப்பா பேசினாலும் அதை பார்த்து ரசிக்கத்தான் தோணுமே தவிர அதுக்கு நடக்க தெரியலை பேச தெரியலைன்னு கிண்டல் பண்ணத்தோணாது. அது மாதிரிதான் ரஜினி எனக்கு!" இதன்பிறகுதான் ரஜினியை ஒரு இமேஜ் வட்டத்துக்குள் இருக்கும் நடிகராக அல்லாமல் ஒரு சக கூட்டாளியைப்போல நினைக்கத்தோன்றியது. இந்த நினைப்பே என்னை அதன் பிறகு மறுபடியும் பார்த்த பழைய ரஜினி படங்களை ரசிக்கவைத்தது. ஜானி, முள்ளும் மலரும், தில்லு முல்லு, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களை மறுபடியும் பார்த்த பொழுது அதில் அவரது ஆளுமை புலப்பட்டது. அந்த சின்னக்கண்களையும், தவறா

more updates

சில வலைப்பதிவு நண்பர்களுடன் இன்று நடப்பதாக இருந்த சந்திப்பு , மழை வெள்ளம் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மதுரவாயல் ஏரியில் வந்த உபரிநீரை, கூவம் ஆற்றுக்குள் திருப்பிவிடாமல், விருகம்பாக்கம் கால்வாய்க்குத் திருப்பி விட்டதால் தான் எங்கள் பகுதி இத்தனை மோசம் என்று அக்கம் பக்கம் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், அந்த நேரத்தில், அதைச் செய்ததுதான் சரி.. என்று தோன்றுகிறது. கூவம் ஆற்றை ஒட்டிய குப்பங்கள் சென்னையில் ஏராளம். அவர்கள் மொத்தமாக wash out ஆகியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். சின்மையாநகர், சாய்நகர், அய்யப்பா நகர் போன்ற பகுதிகள் தற்போது தீவு போல காட்சி அளிக்கிறது. தீவுக்குள்ளே கடைகள் இருப்பதால், பால் போன்ற அத்தியாவசிய விஷயங்கள் தடைபடவில்லை. ஆனால் வெளியே போக வழியில்லை. மொத்த நீரும் வடிய இரண்டு நாட்களாவது ஆகும் என்று சொல்கிறார்கள். நேற்றும் இன்றும் தி ஹிந்து கிடைக்கவில்லை. எங்கள் ஏரியா பக்கத்தில் ( சக்தி நகர்) ஒரு மூன்று வயது குழந்தை நீரில் மூழ்கி இறந்து விட்டது. வடபழநி நூறடி சாலையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது என்று பார்த்துவிட்டு வந்த சிலர் சொன்னார்கள். அதிர்ஷ்டவசமாக நேற்று இரவு மழை இல்லை. ஆனால

சென்னையில் வெள்ளம் - updates

1. சென்னையில் உள்ள சில ஏரிகள் உடைத்துக் கொண்டு விட்டன. சில ஏரிகள் நீர் வரத்து அதிகமானதால் திறந்து விடப்பட்டன.நகரில் பல பகுதிகளில் நீர் புகுந்து கொண்டிருக்கிறது 2. புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளும் திறந்து விடப்பட்டுள்ளன. 3. அடையாறு, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, சின்மயாநகர், கே.கே.நகர், விருகம்பாக்கம், அமைந்தகரை, எம்.எம்.டி.ஏ உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில், தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள், மேடான பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. 4. இன்று முழுதும் மழை இல்லை. இப்போது லேசாக தூறல் அடிக்கிறது. சென்னையின் முக்கிய பகுதிகள் பல இடங்களில் மார்பளவுக்கும், இடுப்பளவுக்கும் நீர் இருக்கிறது. 5. வானிலை அறிக்கையின் படி இன்னும் இருபத்து நான்கு மணிநேரத்துக்கு மழை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 6. நாங்கள் இருக்கும் பகுதி மேடான பகுதி என்பதால், நீர் இங்கே வராது என்று பேசிக் கொள்கிறார்கள். வந்தாலும், அக்கம் பக்கத்தில் இருக்கும் மேல் மாடி குடியிருப்புகளுக்குச் தஞ்சம் அடைய முடிவு செய்திருக்கிறோம். 7. போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விட்டது. 8. புறநகரில

டியர் மிஸ்டர் வருண பகவான்.....

இது நியாயமா , நீங்களே சொல்லுங்க இது நியாயமா? மெட்ராஸ்ங்கறதை, சென்னைன்னு பெயர் மாற்றின மாதிரி, சென்னைங்கறத மறுபடியும் சிரபுஞ்சின்னு பேர் மாற்றிட்டாங்கன்னு யாராச்சும் உங்களுக்குத் தப்பா தகவல் சொல்லிட்டாங்களா? அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க சார். இது எழுதிக்கிட்டு இந்த நேரத்துல, தெருமுக்கு வரையிலும் தண்ணி நிக்கிது. சும்மா கடை கண்ணிக்கு போகலாம்னா கூட, வீட்டை விட்டு கிளம்ப முடியலை. ஒரு தரம் அடிச்சு விட்டுதுன்னா, தண்ணியை பம்ப் அவுட் பண்ணிட்டு, அடுத்த வேலையைப் பாக்கலாம். நீங்கதான் எப்ப வருவீங்கன்னே தெரியலையே? அப்பறம் என்னத்தை நிவாரணம் பண்ணி என்னத்தைப் பாழாப் போறது? மானம் பார்த்த பூமியா, காஞ்சு போன சமயங்களிலேலே உங்களை திட்டினது உண்டுதான்...சில சமயம் கெட்ட வார்த்தையால கூட... ஆனா, அதை எல்லாம் உங்ககிட்ட யாராச்சும் போட்டுக் குடுத்துடுவாங்கன்னு ங்கொப்பராணையா நினைக்கலை. அப்படியே யாராச்சும் கோள்மூட்டி இருந்தாலும் இப்படி பழிவாங்கலாமா? நீங்க எவ்வளோ பெரியவர்? ஏபிநாகராஜன், அவர் எடுத்த படங்களிலேயெல்லாம் உங்களுக்குச் சான்ஸ் குடுத்து சந்தோஷப்படுத்தினாரே, அதை மறந்துட்டீங்களா? இல்லை, சாதாரண அறிவியல் விஷயமான

அறிவிப்பு

இணையத்தில் தமிழ் குறித்து, ஒரு informal கலந்துரையாடலுக்கு ஏற்பாடு நடக்கிறது. தமிழ் இணையத்தில் இருக்கிற தொழில்நுட்பச் சிக்கல்கள், தமிழ் இணையத்தில் புதிய நிரலிகளுக்கான ஆலோசனைகள், புதிய பொருட்களுக்கான வடிவமைப்பதற்கான ஆலோசனைகள் ஆகியவை பற்றியும் பேச, சில வலைப்பதிவு நண்பர்கள், வார இறுதியில் சந்திக்க உள்ளோம். வலைப்பதிவுகளில் ஈடுபடாத சில தொழில்நுட்பர்களும் இதிலே கலந்து கொள்ளுகிறார்கள். இது கலந்து கொண்டு ஆக்கபூர்வமாக விஷயங்களை பரிமாறிக் கொள்ளவும், தங்கள் கருத்துக்களைச் சொல்லவும் விரும்புபவர்கள் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்குத் (icarusprakashATgmailDOTcom) தொடர்பு கொள்ளவும். சந்திப்பு முடிந்ததும், உருப்படியாகப் பேசிய விஷயங்களை இங்கே பதிவு செய்கிறேன். நன்றி