Posts

Showing posts from November, 2004

முகுந்த் நாகராஜனின் நான்கு கவிதைகள்

நூ ல் வடிவத்தில் படித்த மிகச் சில கவிதைத் தொகுப்புகளில் ஒன்று சமீபத்தில் வாசித்த 'அகி'. அதில் இருந்து நான்கு கவிதைகள் ஆட்டம் போடும் வீடு பூட்டிக் கொண்டு கிளம்பினேன் எதையோ மறந்து போனதால் உடனே திரும்பினேன்; திறந்தேன் டிவியும் ·ப்ரிட்ஜும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தன அலமாரியில் உள்ள புத்தகங்களெல்லாம் அணி அணியாகப் பிரிந்து கபடி ஆடிக் கொண்டிருந்தன. சோ·பா-வுக்கும் சேரு-க்கும் ஓட்டப் பந்தயம். பழைய சாக்ஸ்கூட தன்னிச்சையா சுற்றிக் கொண்டிந்தது ஒரு நிமிஷத்துக்குள் எல்லாம் இயல்பு நிலையை அடைந்து விட்டன 'என்ன இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டான்' என்று தண்ணீர் பாட்டில் முணுமுணுத்தது. அப்புறம் அமைதியாகிவிட்டது பிறகு ஒன்றும் நிகழவில்லை. பூட்டிக்கொண்டு கிளம்பினேன். திறப்பதற்கு முன் தட்டி இருக்க வேண்டும் என்ன நாகரிகம் இல்லாத பிறவி நான்! மரணத்தைக் கையாளுதல் செத்துப் போனவர்களுக்குச் செய்ய வேண்டியவைகளின் பட்டியல் என்னிடம் இல்லை கையாண்டதில்லை மரணத்தை தனியாய் இதுவரையில் எரிக்கவோ புதைக்கவோ வேண்டும். அதற்கு முன் மரணச் சான்றிதழ் வாங்கி வரவேண்டும்.

ஒரு புது அனுபவம்

இ ந்த மாத திசைகளுக்காக பேட்டி ஒன்று எடுக்க வேண்டும் என்று பா.ராகவன் சொன்ன போது, 'அதுக்கென்ன செய்தால் போச்சு' என்று சொல்லி விவரங்கள் கேட்டுக் கொண்டு, தொலைபேசியை கீழே வைத்த பின்புதான், சொரேர் ( இதை உபயோகிப்பதற்கு மன்னிக்கவும் ) என்றது. இதுக்கு முன்பு நான் பேட்டி எல்லாம் எடுத்ததில்லையே? எப்படிப் போகவேண்டும். எப்படி நேரம் வாங்க வேண்டும் , என்ன என்ன கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டும். சொல்வதை ஒலிப்பதிவு செய்து கொள்ளவேண்டுமா அல்லது எழுதிக் கொள்ள வேண்டுமா, சுருக்கெழுத்து தெரியவேண்டுமா? போகிற வீட்டில் நாய் இருக்குமா , கட்டிப் போட்டு இருப்பார்களா என்று ஏகப் பட்ட சந்தேகம் வந்து, மீண்டும் தொலைபேசி செய்து, விளக்கம் கேட்டுக் கொண்டேன். குறித்த நேரத்துக்குப் போனேன். நான் பேட்டி எடுத்த எழுத்தாளர் ஆர்விக்கு வயது எண்பதுக்கும் மேலே. பொறுமையாக, நிதானமாக சென்ற பேட்டியில் நிகழ்ந்த சமாசாரங்கள் எல்லாம் சுவாரசியமற்றவை. பேட்டி முழுதும் கேள்விகள், பதில்கள், கேள்விகள், பதில்கள் என்ற ரீதியில் சென்றது. என்னால் மட்டும் தான், உடைக்க (de-cipher) முடியும் என்கிற மாதிரியான குறிப்புக்களை வைத்துக் கொண்டு, ம