Posts

Showing posts from December, 2006

வரைவின் மகளிர் from பாண்டவபுரம்

முன் ஜாமீன் : சுஜாதா மன்னிக்க முன்குறிப்பு : ***** ***** எழுதிய ****** ** ***** என்கிற ஆங்கிலச் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு செய்த புனைவு. இது ஒரு தொடர். முடிவிலே என்ன கதை என்று சொல்கிறேன். முன்னாலேயே சொன்னால், ஒரிஜினலைப் படித்து விட்டு என் சரக்கை டீலிலே விட்டு விடும் அபாயம் இருக்கிறது. முன் எச்சரிக்கை : எங்கேயிருந்தாவது 'பிரஷர்' வந்தால், தொடர் பாதியில் நிறுத்தப்படும். ********************* ஸ்ரீவத்சன் அறிமுகமாகும் படலம் ஒரு டிசம்பர் மாத மழை நாள். கணவன்மார்களை அலுவலகத்துக்கும், பிள்ளைகளைப் பள்ளிக்கும் துரத்திவிட்டு, குடும்பஸ்த்ரீகள், சற்று நேரம் மூக்கைச் சிந்தலாம் என்று தொலைக்காட்சிக்கு முன் அமரும் அசந்தர்ப்பமான முற்பகல் பொழுது. கோடை விடுமுறைக்காலம் என்பதால், ஹைகோர்ட் வளாகம் ஈயடித்துக் கொண்டிருந்தது. தம்புச் செட்டித் தெரு அலுவலகம். கணேஷ் வார் அண்ட் பீஸ் நாவலை, எட்டாவது தரமாக, முதல் பக்கத்தில் இருந்து வாசிக்கத் துவங்கி இருந்தான். உள்ளறையில், அப்போதுதான் உறை பிரிக்கப்பட்டது போல இருந்த லாப்டாப்பை, வசந்த் நோண்டிக் கொண்டிருந்தான். " ஏமாத்திட்டான் பாஸ்.. எலிக்குட்டியே தர

Happy Birthday தலைவரே

Image
என் வயசிலே இருக்கிற அனேகம் பேருக்கு இந்தச் சிக்கல் வந்திருக்கும்னு நினைக்கிறேன். அதாவது படிக்கற வயசிலே, ' நீ யார் ஆளு? கமல்-ஆ? ரஜினி யா?' ங்கற கேள்விக்கு வர குழப்பம் தான் அது. ஒழுக்கமாப் படிச்சு, 98 சதவீதம் மார்க் எடுத்து, ரஷ்யன் சர்க்கஸ் இல்லாட்டி காந்தி படம் மட்டுமே பார்த்து, காலையிலே வயலின் க்ளாஸுக்கும், சாயங்கால மத்யமா வகுப்புக்கும் போய்ட்டு வந்து, அது மட்டுமே வாழ்க்கைன்னு நினைக்கிற அந்த ஒரு சதவீத 'பழத்தை' விட்றுங்க, மீதம் இருக்கிற ஆவரேஜ் பசங்க நெறையப் பேர் வாழ்க்கையிலே இந்தக் கேள்வி விளையாடி இருக்கு..என் வாழ்க்கையிலும் தான். அது ஆச்சு கனகாலம். எங்க எங்கயோ சுத்தினாலும் கடேசியிலே, ஒரு வலைப்பதிவு துவங்கி, கரக்டா திசம்பர் 12 ஆம் தேதி தலைவருக்கு வாழ்த்துச் சொல்றதுலே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு... என்னோட தலையெழுத்து என்னன்னா, நான், ரஜினிகாந்த் ஒரு சாதாரண நடிகர்தான்னும், அவருக்கு இருக்கிற பேருக்கும் புகழுக்கும் அவர் தகுதியானவர் இல்லேன்னும், நம்பும்படியா எழுத/சொல்லக்கூடிய ஆட்களுக்கு மத்தியிலே இருக்கற மாதிரி ஆயிடுச்சு. ரஜினிகாந்த் ஒரு அசாதாரணமான பர்சனாலிட்டிங்கறதை அழுத்த

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

தாடியும் மீசையும் கிளம்பும்போது ஒரு பெங்காலி கடையில் திருட்டு ரெயில் படுக்க உதவும் என்று திருடிக் கொண்டு வந்த தடிமனான ஆங்கில புத்தகங்களையும் பார்த்த சக திருட்டு பயணிகள் கோவாலுவினை ஏதோ அறிவுஜீவியாக நினைத்தார்கள். அதற்கும் வந்தது ஆப்பு. சென்ட்ரலில் இறங்கி டிக்கெட் இல்லாமல் மாட்டியதால், எதிரே இருக்கின்ற ஜெயிலில் கொண்டு போய் காவலில் வைத்து விட்டார்கள். ஏதோ பேரணி, ஊர்வலம் நடத்தி வெள்ளிக்கிழமை உள்ளே தள்ளி திங்கள் கிழமை ஜாமீனில் வெளிவரக் கூடிய ஒரு அரசியல் தலைவர் கோவாலு இருந்த அதே செல்லில் இருந்தார். பெரியார் பற்றியும், சமஸ்கிருதம் பற்றியும், எம்.ஜி.ஆர் பற்றியும் பேசியதை பார்த்த அவர் கோவாலுவிற்கு மூலதனம் நூலை கொடுக்க, பொழுது போகாமல் அப்படியே படித்து முடித்த கோவாலு, கொஞ்ச நாள் கழித்து துரத்தியடிக்கப்படும் போது, புதிதாக வகுப்பு வாத பிரதிநிதித்துவ நிர்மூலம், இனப்பண்பாட்டு முடக்கு இயல் வாதம் என ஜல்லியடிக்க ஆரம்பித்திருந்தான். வெளியே வந்தவுடன் இதை போல உளறியதை பார்த்த் தகரம் கண்டுபிடித்த கம்யுனிஸ்டுகள், கோவாலுவினை அறிவுஜீவியாக கண்டறிந்தார்கள். ஏற்கனவே வாயில் நுழையாத மந்திரங்களை உளறும் கோவாலு, கம்யுன