உசிலி உப்புமா

தேவையான பொருட்கள்

பச்சரிசி நொய் - ஒரு ஆழாக்கு
பயற்றம் பருப்பு - அரை ஆழாக்கு
தண்ணீர் - மூன்று ஆழாக்கு
காய்ந்த மிளகாய் - ஆறு
பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உடைத்த உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கடலை எண்ணெய் - நூறு கிராம்

செய்முறை

* அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மிளகாய், கடலை எண்ணை ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

* கடுகு வெடித்து வந்த உடன், குக்கரில், தண்ணீரை ஊற்றி, பச்சரிசி நொய், பயற்றம் பருப்பு, தாளிதம் ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைக்கவும். மிதமான தீயில் வைக்கவும்.

* நான்கு விசில் வரும் வரை பொறுத்திருக்கவும். நான்காவது விசில் வந்த உடன் அடுப்பில் இறந்து குக்கர் பாத்திரத்தை இறக்கி, ஆவி வெளியேறும் வரை பொறுத்திருந்து குக்கரின் மூடியைத் திறக்கவும் ( இல்லை என்றால், உசிலி உப்புமா உத்திரத்தில் தான் இருக்கும் ). நன்றாகக் கிளறி, ஒரு பாத்திரத்தில் வைத்து சூடாகப் பறிமாறவும் அல்லது நீங்களே சாப்பிடவும்.

* இதற்கு என்று சைட்-டிஷ் என்று எதுவும் தேவையில்லை. ஆர்லிக்ஸ் பையன் போல அப்படியே சாப்பிடலாம்.

Comments

Superb post..

Definitely more than 100 comments expected.
thanks suresh ( penathal)
Kannan said…
'சப்'புனு இருக்கு பிரகாஷ். உப்புப் போட மறந்துட்டீங்க போல...
ஐயையோ - இது பெனாத்தல் இல்லீங்க - அருள் வாக்கு!

( நாமே சொல்லிட்டு comments ஏறறதுக்கு ஹெல்ப் செய்யாட்டி எப்படி?)
அன்பு said…
இதுவரை பருப்புசிலி கேள்விப்பட்டிருக்கேன்... இதென்ன உசிலி உப்புமா-ன்னு வந்தேன். நீங்க அறுசுவைக்கு அனுப்பறதுக்குப் பதில் இங்க போட்டிருக்கேன்னு சொன்னாக்கூட... பின்னாடி ஏதோ கவிதையோ அல்லது எனக்கு புரியாத ஒரு பெரிய மேட்டரோ சொல்லவரீங்களோன்னு ஒரு பிரம்மை... (அது பிரம்மைதானா!?:)
.:dYNo:. said…
>>>>அடுப்பில் "இறந்து" குக்கர் பாத்திரத்தை

;)

Kalakkunga!

.:dYNo:.
Sud Gopal said…
"உசிலி உப்புமா" எப்படி செய்யரதுன்னு சொன்னதுக்கு நொம்ப டாங்ஸுங்ணா.அப்படியே அத்த எப்படிச் சாப்பிடரதுன்னு சொல்லியிர்ந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திர்க்கும். :)))

வாலிப வயோதிக அன்பர்களே,அன்பிகளே...

குரோர்பதி நிகழ்ச்சியில கலந்துக்க ஆசையா இருக்கா??
இப்பவே இங்கே வந்து பாருங்க....

http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_112238520675418920.html

சுதர்சன்.கோபால்
//அடுப்பில் இறந்து குக்கர் பாத்திரத்தை இறக்கி, ஆவி வெளியேறும் வரை.... //

சரியாச் சொன்னீங்க. ஆவி வெளியேறுனா இறந்து போயிரும்:-)))

//( இல்லை என்றால், உசிலி உப்புமா உத்திரத்தில் தான் இருக்கும் ). //

:-)))))))))

இன்னிக்கு உசிலி உப்புமாதான்
செய்யப்போறேன்.
கடவுள் என்னைக்காப்பாற்றுவாராக.
"...அடுப்பில் இறந்து குக்கர் பாத்திரத்தை இறக்கி, ஆவி வெளியேறும் வரை .... ( உசிலி உப்புமா உத்திரத்தில் .....).

பிரகாஷ், எழுதும்போது நடு நிசியா? :-)
ஐகாரஸ்,
சிலருக்கு ஜாதக ராசி !!!! எதைப்பத்தி எழுதினாலும், கமெண்ட் குவியுது ;-) பாருங்க, நானே "வேணாம், வேணாம்"ன்னு
இருந்துட்டு, ஓடியாந்து பின்னூட்டம் குடுத்துட்டேன் :)

அப்றம், என்னோட சந்திரமுகி பதிவுக்கு நீங்க
பின்னூட்டம் இடவில்லை என்றால் எப்படி ? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல, சொல்லிப்புட்டேன் :)

என்றென்றும் அன்புடன்
பாலா
Unknown said…
//பறிமாறவும்//

ரொம்ப அழுத்தி பரிமாறிட்டிங்க போல ;-)
//( இல்லை என்றால், உசிலி உப்புமா உத்திரத்தில் தான் இருக்கும் ).// :-))))
ப்ரகாஷ்,

1. உசிலி உப்புமா என்ற தலைப்பிற்கு பதிலாக
"உத்திரத்தில் உயிர் அல்லது உப்புமா "
என்ற தலைப்பை வைத்திருந்திருக்கலாம்.

2. தேவையான பொருட்களில் ஒன்று விடுபட்டு விட்டது - சுய நினைவுடன், நல்ல நடமாட்டத்துடன் இருக்கும் திடகாத்திரமான, உத்திரத்தில் உசிலி உப்புமா சாப்பிட கூடிய நபர் - 1 நம்பர்.

3.எப்படியும்.. உங்களது இந்த ரெசிபி படித்து அதை முயற்சித்த நாங்கள் உயிரோடு இருக்கவே போவதில்லை - ஏனென்றால் " அடுப்பில் இறந்து, பின்பு ஆவி எல்லாம் வெளியேறிய பின் " - இறந்து விட்ட நாங்கள், அந்த உசிலி(!!!!!....?)யை சாப்பிட்டும்(!?) தற்கொலை செய்துகொல்லவும் வேண்டுமா என்ன.

உங்களது உசிலி உப்புமாவை சமைக்காத்தால் இன்னும் உயிரோடு இருக்கும் - பத்ம ப்ரியா
//உங்களது உசிலி உப்புமாவை சமைக்காத்தால் இன்னும் உயிரோடு இருக்கும் - பத்ம ப்ரியா //

ப்ரியா : ஆமா..எதுக்கு ரிஸ்க்கு? .வெஷப் பரீட்சை வேணாம்...... சமைச்சி ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப் போவுது....... கதை வேற பாதில நிக்கிது.. :-):-):-) :-)

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்